Tuesday, December 22, 2015

கோனார்க் - பயணக்கட்டுரை.

Prelude: இன்றைக்கு கோனார்க் கோவில் பற்றி ஏதோ பேச்சு வந்த போதுதான் நான் எப்போதோ கோனார்க் பற்றி மரத்தடியில் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. எப்படியும் ப்ளாக்கில் இருக்கும் என்று தேடும் போதுதான் தெரிந்தது அது இங்கே வந்து சேர்ந்திருக்கவில்லை என்று. ஸோ... இந்த மீள்பதிவு! 2001ல் எழுதியதாயிருக்கும்.

முதலில் கொஞ்சம் ஒரிஸ்ஸாவைப் பற்றி. அங்கே இருந்த இரண்டு வருடத்தில் எப்போது வெளியில் கிளம்பினாலும், ஊரும் மனிதர்களும் ஆச்சர்யம் தான். கேரளாவை நினைவு படுத்தும் பசுமை. எந்த நகரத்தை விட்டு ஒரு 50 கி.மி வெளியே போனாலும் ஒரு பக்கா கிராமம் பார்க்கலாம். பழுப்பேறிய வேட்டி, மேல் சட்டையில்லாத ஆண்கள். இன்னும் ஜாக்கெட்டுக்குப் பழகாத வயதான பெண்கள். அதிகம் போக்குவரத்தில்லாத ரோடுகளில் எல்லாமே தெருவிலேதான். நெல்லு காய வைப்பது, வட்டமாக உக்கார்ந்து ஊர்க்கதை பேசுவது... எல்லாமே. சரியான மண்ணின் மைந்தர்கள். வெளிப்பார்வைக்கு அமைதியா இருந்தாலும் சீண்டினால் முரட்டுக் கூட்டம் தான்.
 
புவனேஷ்வர், மாநில தலைநகருக்கான பளபளப்பெதுவும் இல்லாமல் இருக்கிறது. சிகப்போடிய கற்களில் நிறைய சிற்ப வேலை நடக்கிறது. நுணுக்கமான வேலை பாடில்லாமல் பெரிய பெரிய சிற்பங்களாய். புவனேஷ்வரிலிருந்து 60 கி.மி தொலைவில் பூரி. ஜகந்நாதர் கோவில் புராதனமாய், பெரிய கோவில்களுக்குரிய எல்லா லட்சணங்களுடன். ரொம்ப எதிர்பார்ப்போடு போனால் பிரதான சந்நிதியில் ஆச்சர்யம் தான் காத்திருந்தது. பலராமர், சுபத்திரா, ஜகந்நாதர்.. ரெண்டு அண்ணன்களும் தங்கையும். அதுவும் பிரம்மாண்டமான அளவில், மரத்தாலான, வித்தியாசமான அமைப்பில். கண்கள் ரெண்டும் பெரிய வட்டங்களாய், கைகள் இருக்க வேண்டிய இடத்தில் முன்புறம் நீட்டிய உருண்டையான வடிவத்தில். நடுவில் நின்றால் மூன்று பேரையும் ஒன்றாக முழுமையாகப் பார்க்க முடியாது. கொஞ்சம் வலது புறம் நகர்ந்தும், இடது புறம் நகர்ந்தும் தான் பலராமரையும் ஜகந்நாதரையும் பார்க்க முடியும்.
 
ஆச்சர்யம் தாங்காமல் வழிகாட்டியிடம் கேட்ட போது, அவருக்கு ரொம்ப சந்தோஷம். கதை சொல்லத்தான்! அப்போதைய ராஜாவுக்கு (பெயர் நினைவில்லை) கனவு... ஆற்றில் கட்டை வரும், அதை எடுத்து கடவுள் உருவம் செய்யவும், செய்பவர்கள் கடைசில் இறந்து விடுவார்கள் என்று. ஊரெல்லாம் அறிவித்தும் யாரும் வரவில்லை. கடைசியில் ஒரு வயதானவர் முன் வந்தார். அவருடைய நிபந்தனை... 28 நாள் பூட்டிய கதவிற்குப் பின்னால் வேலை செய்வேன். என்னவானாலும் கதவைத் திறக்கக் கூடாது என்று. ராஜாவும் சம்மதிக்க, வேலை தொடங்கியது. தினமும் வெளியிலிருந்து வேலை நடக்கும் சத்தம் கேட்டுக் கொண்டு காத்திருந்தார். 21 ம் நாள் சத்தம் எதுவும் வரவில்லை. ராஜாவுக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை. 24 ம் நாள் வரைக் காத்திருந்து பின்னர் கதவைத் திறக்க மயங்கிய நினையில் இருந்த முதியவர் ஏன் திறந்தாய் என்று ராஜாவைத் திட்டி விட்டு மாயமாய் மறந்து விட்டார். வேறு வழியில்லாமல் முற்றுப் பெறாத உருவங்களையே பிரதிஷ்டை செய்ததாக வரலாறு. சுவாரசியமாகத்தான் இருந்தது.
     
வெளிப்பிரகாரத்தில் இருக்கும் பால்கோபால் (குழந்தை கிருஷ்ணன்) கொள்ளை அழகு. இவ்வளவு பெரிய கோவிலில் பராமரிப்பு, இல்லை என்றே சொல்லலாம். எல்லா சன்னிதிகளிலும் கடவுள் சிலை மேலேயே கரப்பான் பூச்சி ஓடுகிறது. இந்தக் கோவிலில் என்றைக்கு கூட்டமே இல்லாமல் இருக்கும்? அன்றைக்குப் போய் அமைதியாய் ஒவ்வொன்றையும் பார்க்க வேண்டும். அப்படி ஒரு நாளே இருக்காது என்றுதான் தோண்றுகிறது.
 
பூரி கடற்கரை அதிகம் அசுத்தப் படாமல், ஆக்ரோஷமாய் இருக்கிறது. மழை இல்லாத நாட்களில் மணற்சிற்பங்களைப் பார்க்கலாம். சில மணி நேரங்களில் பிரம்மாண்டமாய் எழுந்து, காணாமலும் போய் விடுகிறது, கடலலையில்.
 
கோனார்க் தான் உண்மையான மாஸ்டர் பீஸ். ரெண்டு நாளாவது செலவு பண்ணி நிதானமாய் பார்த்தாலும் தீராது. அதுவும் இப்போது இருப்பது சிதிலமடைந்த கோவில் மட்டுமே. ஸ்தல புராணமாக சொல்வது... கிருஷ்ணருடைய மகன் சம்பா தீராத தோல் வியாதியால பாதிக்கப்பட்ட போது, இங்கு வந்திருந்து சூரிய ஒளியும், கடல் நீர் குளியலும் குணப்படுத்தியதால் சூரிய பகவானுக்காக இந்தக் கோவில் கட்டப் பட்டதாம்.
 
சரித்திரம் சொல்வது, முதலாம் நரசிம்ஹ தேவனால் கட்டப்பட்டதாக. கலிங்கத்துப் போருக்குப் (கலிங்கத்துப் போருக்கும் இந்த அரசருக்கும் என்ன சம்பந்தம்?) பிறகு மக்கள் இல்லற வாழ்வில் ஈடுபாடில்லாமல் போனதால் இப்படி(!!!) ஒரு கோவில் கட்டியதாக சொல்லப் படுகிறது. ரொம்ப நுணுக்கமான வேலைப் பாடுகளுடன், பாதிக்கு மேல் சிதைந்த போதும், கம்பீரமாய் நிற்கிறது.
 
தூண்கள் எதுவும் இல்லாமல், கற்களுக்கு நடுவில் இரும்புத் துண்டங்களை இணைத்து, முழு அமைப்பும் உச்சியில் இருந்த ஒரு சக்தி வாய்ந்த காந்தத்தால் இணைக்கப் பட்டிருந்தது. போர்ச்சுக்கீசியர்களின் கடல் பயணங்களின் போது காந்தத்தின் சக்தி அவர்களை வழி தவறச் செய்ததால் காந்தத்தை விலக்க முழு கோபுரமும் கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது. சூரிய பகவான் சிலை தற்போது பூரியில் இருப்பதாக சொல்கிறார்கள். பிரதான மண்டபம், தொடர்ந்த நாட்டிய மண்டபம் எல்லாம் மண் மூடி, வெளிப்புறம் மட்டும் மீதியாய் நிற்கிறது.
   
ஏழு குதிரைகளும் (ஏழு நாட்கள்)  24 சக்கரங்களும் (24 மணி நேரம்) கொண்ட பிரம்மாண்டமான தேராக கோவில் அமைக்கப்பட்டிருந்தது. கோவில் மூன்று நிலைகளாக உள்ளது... குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், வயதான பருவம். குழந்தைகளின் கண் பார்வை படும் உயரத்தில் விலங்குகளின் சிற்பங்கள், அவர்கள் வயதிற்கேற்ப. வாலிப பருவத்தில்...கணக்கில்லாத சிற்பங்கள். ரெண்டு மணி நேரத்தில் பார்த்தது ரொம்ப சொற்பம். அலங்காரம் செய்து கொள்ளும் பெண், அவளுடைய அலங்கார சாதனங்களுடன். தோழிகளோடு குளிக்கும் பெண், கூடலுக்குத் தயாராகும் பெண். கூடலின் அத்தனை சாத்தியங்களும், சின்ன உருவங்களில், ஆளுயரத்தில், பிரம்மாண்டத்தில். வாத்ஸ்யாயனரின் அத்தனை முத்திரைகளும் இருப்பதாக சொல்கிறார்கள்.
 
வெள்ளைத்தோலோடு போனால் விவரமாக சொல்வார்கள் போல! வழிகாட்டிக்கு அதற்கு மேல் சொல்ல தயக்கம். அதனால் பார்க்காது விட்டது ரொம்ப அதிகம். முன் மண்டபத்தில் மூன்று பாகங்களாய் அமைத்து ஒவ்வொரு நான்கு மாதங்களிலும் சூரிய ஒளி ஒவ்வொரு பாகம் வழியாக உள்ளே இருந்த சூரிய பகவான் மேல் விழுமாறு அமைந்திருக்கிறது. இப்பொது அதெல்லாம் கேட்பதற்கு மட்டுமே, பார்க்க எதுவும் இல்லை. இன்னும் நாழிகை கணக்கில் எதேதோ விவரங்கள், நட்சத்திரக் கணக்கில் நிறைய அமைப்புகள். நல்ல விவரம் தெரிந்த ஒரு வழிகாட்டியும், ரெண்டு மூன்று நாளும் இருந்தால் ஒரு நிறைவான பயணம் நிச்சயம். பாதிக்கு மேல் விடலைகள் கூட்டம் தான், கிளுகிளு சிரிப்போடு வேடிக்கை பார்க்க. மிஞ்சியிருப்பதாவது பத்திரமாய் இருக்க வேண்டும்.

PS: 2001ல் நாங்கள் போயிருந்த போது அது ஒரு ஆள் நடமாட்டம் குறைந்த பகுதி. மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு டூரிஸ்ட் அலுவகத்தின் ஒரு சிப்பந்தி மட்டுமே இருப்பார் என்று சொல்லி அங்கே தங்க விடவில்லை. //அந்திநேரச் சூரியன், சந்திரனின் முதல் கிரணம், நல்ல பௌர்ணமி நிலவு, அதிகாலைச் சூரியன்... ஓவ்வொரு ஒளியில் அது என்ன நிறம் கொள்ளும் என்று பார்க்கும் ஆவலை அந்த சிதைந்த கோபுரம் தூண்டுகிறது.//  இப்படி எப்போதோ எழுதி வைத்திருந்திருக்கிறேன். பதினைந்து வருடங்களாகியும் அது நடக்கவில்லை!

கோனார்க் - பயணக்கட்டுரை.

Prelude: இன்றைக்கு கோனார்க் கோவில் பற்றி ஏதோ பேச்சு வந்த போதுதான் நான் எப்போதோ கோனார்க் பற்றி மரத்தடியில் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. எப்படியும் ப்ளாக்கில் இருக்கும் என்று தேடும் போதுதான் தெரிந்தது அது இங்கே வந்து சேர்ந்திருக்கவில்லை என்று. ஸோ... இந்த மீள்பதிவு! 2001ல் எழுதியது.

முதலில் கொஞ்சம் ஒரிஸ்ஸாவைப் பற்றி. அங்கே இருந்த இரண்டு வருடத்தில் எப்போது வெளியில் கிளம்பினாலும், ஊரும் மனிதர்களும் ஆச்சர்யம் தான். கேரளாவை நினைவு படுத்தும் பசுமை. எந்த நகரத்தை விட்டு ஒரு 50 கி.மி வெளியே போனாலும் ஒரு பக்கா கிராமம் பார்க்கலாம். பழுப்பேறிய வேட்டி, மேல் சட்டையில்லாத ஆண்கள். இன்னும் ஜாக்கெட்டுக்குப் பழகாத வயதான பெண்கள். அதிகம் போக்குவரத்தில்லாத ரோடுகளில் எல்லாமே தெருவிலேதான். நெல்லு காய வைப்பது, வட்டமாக உக்கார்ந்து ஊர்க்கதை பேசுவது... எல்லாமே. சரியான மண்ணின் மைந்தர்கள். வெளிப்பார்வைக்கு அமைதியா இருந்தாலும் சீண்டினால் முரட்டுக் கூட்டம் தான்.

புவனேஷ்வர், மாநில தலைநகருக்கான பளபளப்பெதுவும் இல்லாமல் இருக்கிறது. சிகப்போடிய கற்களில் நிறைய சிற்ப வேலை நடக்கிறது. நுணுக்கமான வேலை பாடில்லாமல் பெரிய பெரிய சிற்பங்களாய். புவனேஷ்வரிலிருந்து 60 கி.மி தொலைவில் பூரி. ஜகந்நாதர் கோவில் புராதனமாய், பெரிய கோவில்களுக்குரிய எல்லா லட்சணங்களுடன். ரொம்ப எதிர்பார்ப்போடு போனால் பிரதான சந்நிதியில் ஆச்சர்யம் தான் காத்திருந்தது. பலராமர், சுபத்திரா, ஜகந்நாதர்.. ரெண்டு அண்ணன்களும் தங்கையும். அதுவும் பிரம்மாண்டமான அளவில், மரத்தாலான, வித்தியாசமான அமைப்பில். கண்கள் ரெண்டும் பெரிய வட்டங்களாய், கைகள் இருக்க வேண்டிய இடத்தில் முன்புறம் நீட்டிய உருண்டையான வடிவத்தில். நடுவில் நின்றால் மூன்று பேரையும் ஒன்றாக முழுமையாகப் பார்க்க முடியாது. கொஞ்சம் வலது புறம் நகர்ந்தும், இடது புறம் நகர்ந்தும் தான் பலராமரையும் ஜகந்நாதரையும் பார்க்க முடியும்.
ஆச்சர்யம் தாங்காமல் வழிகாட்டியிடம் கேட்ட போது, அவருக்கு ரொம்ப சந்தோஷம். கதை சொல்லத்தான்! அப்போதைய ராஜாவுக்கு (பெயர் நினைவில்லை) கனவு... ஆற்றில் கட்டை வரும், அதை எடுத்து கடவுள் உருவம் செய்யவும், செய்பவர்கள் கடைசில் இறந்து விடுவார்கள் என்று. ஊரெல்லாம்
அறிவித்தும் யாரும் வரவில்லை. கடைசியில் ஒரு வயதானவர் முன் வந்தார். அவருடைய நிபந்தனை... 28 நாள் பூட்டிய கதவிற்குப் பின்னால் வேலை செய்வேன். என்னவானாலும் கதவைத் திறக்கக் கூடாது என்று. ராஜாவும் சம்மதிக்க, வேலை தொடங்கியது. தினமும் வெளியிலிருந்து வேலை நடக்கும் சத்தம் கேட்டுக் கொண்டு காத்திருந்தார். 21 ம் நாள் சத்தம் எதுவும் வரவில்லை. ராஜாவுக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை. 24 ம் நாள் வரைக் காத்திருந்து பின்னர் கதவைத் திறக்க மயங்கிய நினையில் இருந்த முதியவர் ஏன் திறந்தாய் என்று ராஜாவைத் திட்டி விட்டு மாயமாய் மறந்து விட்டார். வேறு வழியில்லாமல் முற்றுப் பெறாத உருவங்களையே பிரதிஷ்டை செய்ததாக வரலாறு. சுவாரசியமாகத்தான் இருந்தது.
     
வெளிப்பிரகாரத்தில் இருக்கும் பால்கோபால் (குழந்தை கிருஷ்ணன்) கொள்ளை அழகு. இவ்வளவு பெரிய கோவிலில் பராமரிப்பே இல்லை என்று சொல்லலாம். எல்லா சன்னிதிகளிலும் கடவுள் சிலை மேலேயே கரப்பான் பூச்சி ஓடுகிறது. இந்தக் கோவிலில் என்றைக்கு கூட்டமே இல்லாமல் இருக்கும்? அன்றைக்குப் போய் அமைதியாய் ஒவ்வொன்றையும் பார்க்க வேண்டும். அப்படி ஒரு நாளே இருக்காது என்றுதான் தோண்றுகிறது.
பூரி கடற்கரை அதிகம் அசுத்தப் படாமல், ஆக்ரோஷமாய் இருக்கிறது. மழை இல்லாத நாட்களில் மணற்சிற்பங்களைப் பார்க்கலாம். சில மணி நேரங்களில் பிரம்மாண்டமாய் எழுந்து, காணாமலும் போய் விடுகிறது, கடலலையில்.
கோனார்க் தான் உண்மையான மாஸ்டர் பீஸ். ரெண்டு நாளாவது செலவு பண்ணி நிதானமாய் பார்த்தாலும் தீராது. அதுவும் இப்போது இருப்பது சிதிலமடைந்த கோவில் மட்டுமே. ஸ்தல புராணமாக சொல்வது... கிருஷ்ணருடைய மகன் சம்பா தீராத தோல் வியாதியால பாதிக்கப்பட்ட போது, இங்கு வந்திருந்து சூரிய ஒளியும், கடல் நீர் குளியலும் குணப்படுத்தியதால் சூரிய பகவானுக்காக இந்தக் கோவில் கட்டப் பட்டதாம்.
சரித்திரம் சொல்வது, முதலாம் நரசிம்ஹ தேவனால் கட்டப்பட்டதாக. கலிங்கத்துப் போருக்குப் (கலிங்கத்துப் போருக்கும் இந்த அரசருக்கும் என்ன சம்பந்தம்?) பிறகு மக்கள் இல்லற வாழ்வில் ஈடுபாடில்லாமல் போனதால் இப்படி(!!!) ஒரு கோவில் கட்டியதாக சொல்லப் படுகிறது. ரொம்ப
நுணுக்கமான வேலைப் பாடுகளுடன், பாதிக்கு மேல் சிதைந்த போதும், கம்பீரமாய் நிற்கிறது.
தூண்கள் எதுவும் இல்லாமல், கற்களுக்கு நடுவில் இரும்புத் துண்டங்களை இணைத்து, முழு அமைப்பும் உச்சியில் இருந்த ஒரு சக்தி வாய்ந்த காந்தத்தால் இணைக்கப் பட்டிருந்தது. போர்ச்சுக்கீசியர்களின் கடல் பயணங்களின் போது காந்தத்தின் சக்தி அவர்களை வழி தவறச் செய்ததால் காந்தத்தை விலக்க முழு கோபுரமும் கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது. சூரிய பகவான் சிலை தற்போது பூரியில் இருப்பதாக சொல்கிறார்கள். பிரதான மண்டபம், தொடர்ந்த நாட்டிய மண்டபம் எல்லாம் மண்
மூடி, வெளிப்புறம் மட்டும் மீதியாய் நிற்கிறது.
   
ஏழு குதிரைகளும் (ஏழு நாட்கள்)  24 சக்கரங்களும் (24 மணி நேரம்) கொண்ட பிரம்மாண்டமான தேராக கோவில் அமைக்கப்பட்டிருந்தது. கோவில் மூன்று நிலைகளாக உள்ளது... குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், வயதான பருவம். குழந்தைகளின் கண் பார்வை படும் உயரத்தில் விலங்குகளின் சிற்பங்கள், அவர்கள் வயதிற்கேற்ப. வாலிப பருவத்தில்...கணக்கில்லாத சிற்பங்கள். ரெண்டு மணி நேரத்தில் பார்த்தது ரொம்ப சொற்பம். அலங்காரம் செய்து கொள்ளும் பெண், அவளுடைய அலங்கார சாதனங்களுடன். தோழிகளோடு குளிக்கும் பெண், கூடலுக்குத் தயாராகும் பெண். கூடலின் அத்தனை
சாத்தியங்களும், சின்ன உருவங்களில், ஆளுயரத்தில், பிரம்மாண்டத்தில். வாத்ஸ்யாயனரின் அத்தனை முத்திரைகளும் இருப்பதாக சொல்கிறார்கள்.
வெள்ளைத்தோலோடு போனால் விவரமாக சொல்வார்கள் போல! வழிகாட்டிக்கு அதற்கு மேல் சொல்ல தயக்கம். அதனால் பார்க்காது விட்டது ரொம்ப அதிகம். முன் மண்டபத்தில் மூன்று பாகங்களாய் அமைத்து ஒவ்வொரு நான்கு மாதங்களிலும் சூரிய ஒளி ஒவ்வொரு பாகம் வழியாக உள்ளே இருந்த சூரிய பகவான் மேல் விழுமாறு அமைந்திருக்கிறது. இப்பொது அதெல்லாம் கேட்பதற்கு மட்டுமே, பார்க்க எதுவும் இல்லை. இன்னும் நாழிகை கணக்கில் எதேதோ விவரங்கள், நட்சத்திரக் கணக்கில் நிறைய அமைப்புகள். நல்ல விவரம் தெரிந்த ஒரு வழிகாட்டியும், ரெண்டு மூன்று நாளும் இருந்தால் ஒரு
நிறைவான பயணம். பாதிக்கு மேல் விடலைகள் கூட்டம் தான், கிளுகிளு சிரிப்போடு
வேடிக்கை பார்க்க. மிஞ்சியிருப்பதாவது பத்திரமாய் இருக்க வேண்டும்.

PS: 2001ல் நாங்கள் போயிருந்த போது அது ஒரு ஆள் நடமாட்டம் குறைந்த பகுதி. மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு டூரிஸ்ட் அலுவகத்தின் ஒரு சிப்பந்தி மட்டுமே இருப்பார் என்று சொல்லி அங்கே தங்க விடவில்லை. //அந்திநேரச் சூரியன், சந்திரனின் முதல் கிரணம், நல்ல பௌர்ணமி நிலவு, அதிகாலைச் சூரியன்... ஓவ்வொரு ஒளியில் அது என்ன நிறம் கொள்ளும் என்று பார்க்கும் ஆவலை அந்த சிதைந்த கோபுரம் தூண்டுகிறது.//  இப்படி எப்போதோ எழுதி வைத்திருந்திருக்கிறேன். பதினைந்து வருடங்களாகியும் இப்போதும் அது நடக்கவில்லை!

Friday, December 11, 2015

வீணையின் குரல் எஸ். பாலசந்தர்: ஓர் வாழ்க்கை சரிதம்


முதல் முதலாக வீணை பாலசந்தர் பெயரை அப்பா சொல்லித்தான் கேட்டிருக்கிறேன். ஏழெட்டு வயதிருக்கும் அப்போது. யாரிடமிருந்தோ கொண்டு வந்து வீட்டில் சில நாட்கள் இருந்த எல்பி ரெக்கார்ட் ப்ளேயரும் அதை அப்பா மட்டுமே கையாண்டதும் தெளிவில்லாமல் நினைவில் வந்து போகிறது. அதில் தான் கேட்டிருக்கக் கூடும். வாத்திய கருவி இசையைக் கேட்கும் பரிச்சயம் இல்லாததால் அதில் லயிக்க முடியாததுமாக ஞாபகம்.

ஒரு முறை பார்க் வீதியில் நவராத்திரி கொலு பார்க்கப் போன வீட்டில் பார்த்திருந்த வீணையும் ரொம்ப நாள் நினைவில் ஒரு ஆசையாய் தங்கியிருந்தது. லாவகமாக அதை வாசிப்பது போல ஒரு கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். அதை கற்றுக் கொள்ள ஆசைப் படுகிறேன் என்று சொல்லக் கூட முடியாது என்று மட்டும் அப்போதே தெரிந்திருந்தது. யாரிடமும் சொல்லாமலே மறைந்து போன ஆசை அது.

புத்தகம் வாங்குகிறோமோ இல்லையோ சும்மாவாகவாவது கொஞ்ச நாட்களுக்கு ஒரு முறை ஒரு வட்டம் அடித்துக் கொண்டிருந்த லேண்ட்மார்க்கை மூடியதை ஜீரணிக்கவே முடியாதிருந்தது. எக்ஸ்பிரஸ் அவென்யூவின் சிறிய புத்தகக் கடை அந்த லேண்ட்மார்க் நாட்களுக்கு உறை போடக் காணாது என்றாலும் அங்கே தான் இந்த வீணையின் குரல் கண்ணில் பட்டது. 

 வழக்கம் போல ஓய்ந்து ஒழிந்து வாசித்த போதும் புத்தகம் தந்த ஆச்சர்யம் அளவில்லாதது. விக்ரம் சம்பத் ஆங்கிலத்தில் எழுதி வியெஸ்வியால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட வீணை எஸ். பாலசந்தரின் வாழ்க்கை சரிதம். Genius, extra ordinarily confident, multi talented personality. இசை, ரேடியோ, வாசிப்பு, சினிமா என்று மனிதர் கை வைக்காத துறையேயில்லை. அதிலும் எல்லாவற்றிலுமே தி பெஸ்ட். வீணைதான் தன்னுடைய வாத்தியம் என்று முடிவெடுத்ததாகட்டும், சொந்த முயற்சியில் தானே கற்றுக் கொண்டதாகட்டும், வாத்தியத்தில் ஒவ்வொரு பாகத்திலும் தொடர்ந்து செய்து கொண்டிருந்த மாற்றங்கள்/ முன்னேற்றங்களாகட்டும்... எல்லாமே அசாதாரணமானது.

கர்நாடக இசையை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல, அதை சரியான முறையில் பிரபலப் படுத்த... என்ற எல்லா முயற்சிகளிலும் அவரது திட்டமிடல்களும் நிகழ்த்திக் காட்டியதும்... perfect! மொத்த வாழ்க்கை நிகழ்ச்சிகளை தன்னுடைய குறிப்புகளோடு ஆல்பங்களாக தொகுத்து வைக்க எத்தனை தன்னம்பிக்கை வேண்டியிருக்கும். என் வாழ்க்கை, அதை நான் நிலைத்திருக்க விட்டுச் செல்கிறேன் என்றதோர் தன்னம்பிக்கை.


அதி தீவிர கொள்கைப் பிடிப்பும் அதற்காக அதன் உச்சம் வரை போராடுவதுமான ஹீரோயிஸம் எல்லாரும் செய்ய விரும்பும் ஒன்றாயிருந்தாலும் செய்யக் கூடிய சாத்தியங்கள் குறைவு. எஸ். பாலசந்தர் அதற்காக பெரும் அமைப்புகளோடு, பெரிய இசைக்கலைஞர்களோடு தன்னந்தனியே நிகழ்த்திய போராட்டங்களும் அதற்காக சந்தித்த எதிர்ப்புகளும் மலைக்க வைக்கிறது. அதற்காக முரடரென்று ஒதுக்க முடியாத மென்மையான பக்கங்களுக்கும் சொந்தக்காரர். ஆதர்ச மனிதராயிருந்திருக்கிறார். அவருடைய இயக்கத்தில் வந்த காலங்கள் கடந்தும் பெயர் சொல்லும் படங்களைத் தேடிப் பார்க்க வேண்டும்.

A man with larger than life image... அது போல ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்க யாரும் ஆசைப் படக் கூடும், ஆனால் அவரோடு வாழ்ந்திருந்திருப்பது என்பது நிச்சயம் சுலபமல்ல.

Saturday, June 13, 2015

Epilogue of இடப்பெயர்ச்சி பலன்கள்.

மரத்தடியில் ஒரு காலத்தில் எழுதியதெல்லாம் அவரவர் பேர் போட்டு ஒரு ஃபோல்டரில் வைத்திருந்தார்கள். எனக்கு தெரிந்து அது முழுக்க முழுக்க ஜெயஸ்ரீயின் உழைப்பு. ப்ளாக்  ஆரம்பித்தபோது ரொம்ப சுலபமாக அதற்கு ஒரு லிங்க் கொடுத்து மொத்தமாக மறந்தே போனதை மரத்தடி.காம் இல்லாமல் போன போது அவசரமாக ஒரு வோர்ட்ப்ரெஸ் பளாக்ல் சேமித்து வைத்தும், இது தவறிப் போயிருக்கிறது. அதனால் தான் இங்கே.

தினம் ஒன்றாக இந்த பனிரெண்டு நாட்களாக‌ இடப்பெயர்ச்சி பலன்களை ரீ-போஸ்ட் செய்யும் போது மறுபடியும் அந்த நாட்களுக்கு போய் விட்டு வந்தேன். நிறைய விஷயம் காலப் போக்கிலே நீர்த்துப் போயிருக்கிறது. குறிப்பாக‌, கோனார்க். அதோட தொடர்பு படுத்தி நான் வைத்திருந்த கனவுகளை மறந்தே போயிருக்கிறேன். இனிமேல் அது வெறும் கனவாய் மட்டும் இருக்கப் போகிறது. சும்மாவாவது ஒரு தரம் போய் பார்த்து விட்டு வர வேண்டும்.

இடையில் ஆறாவது பாகம் காணாமல் பழைய மெயில் குப்பைகளையெல்லாம் கிளறும் போது தான் தெரிந்தது இதை எழுத நான் எவ்வளவு தயங்கினேன் என்றும் சின்னக் கண்ணன் என்னை எழுத வச்சதும். ஒரு மாதிரி சொந்தக் கதையெல்லாம் கடை வைக்கற மாதிரி ஆயிடுமோன்னு நான் பயந்ததும் ஞாபகம் வருகிறது. ஆனால் இதெல்லாம் வெறும் புக் மார்க் தான். இதை நான் வாசிக்கும் போது விரியும் பெரிய படம் எனக்கே எனக்கு மட்டும் சொந்தமானது. (நானெல்லாம் எப்படி சுயசரிதை எழுதப் போறேனோ! அப்படி ரொம்ப நாளாக‌ சொல்லிக் கொண்டிருக்கிறேன்!)

அந்த தேடலில் கிடைத்த காபி க்ளப்பில் எழுதிய 'மலர்மஞ்சம்' போஸ்ட் ஏதோ தெரியாத ஃபாண்டில் இருக்கிறது. என்ன எழுதியிருப்பேன் என்பது ஞாபகம் இருந்தாலும் முழுதாக வாசிக்க ஆசையாக இருக்கிறது. இதுவரையான முட்டல்களில் எதுவும் ப்ரயோஜனமில்லை. ஆனால் மலர்மஞ்சம் மறுபடியும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.  கூடவே ஆதிகாலத்து அமெச்சூர் கவிதை முயற்சிகள். யம்மா... எல்லாருக்கும் அப்போது நிறைய பொறுமை இருந்திருக்கிறது. தட்டிக் கொட்டி சரி செய்திருக்கிறார்கள். பாராவின் புத்தகப்புழு குழுமத்திற்காக எழுதிய இரண்டு காதல் கவிதைகளுக்கும் அதே கதி. எங்கிருந்து பிடித்திருப்பேன் அந்த ஃபாண்ட்களை!

இத்தனை ஊர் சுத்தல்களுக்கெல்லாம் சேர்த்தி வைத்து கடந்த ஒன்பது வருடங்களாக சென்னை வாசம். ஒரு ஊரில் ரெண்டு வருஷத்துக்கு மேல் தங்காத நான் எப்படி இத்தனை நாள் ஓட்டினேன் என்பது ஆச்சரியம். ஆனால் சென்னை அலுத்துப் போய்விட்டது. இடப்பெயர்ச்சி பலன்கள் இரண்டாவது சீரீஸ் எழுதவாவது இங்கேயிருந்து மாற்றம் வர வேண்டும். வெளியூர்களில் இருக்கும் ஒரு ஆனானிமிட்டி இங்கேயில்லை. அந்த தைரியத்தில் தான் கொல்கத்தாவில் இருந்த போது சோனார்காச்சிக்கெல்லாம் போக யோசித்திருக்கிறேன். சென்னையில் வாலை சுருட்டிக் கொண்டிருக்கிறேன்.

Looking back... today I am more stable, calm and accepting.  ஆனாலும் மனசுக்குள் உணரும் தனிமை மட்டும் ஆழமாக, நீண்டதாக.

Thursday, June 11, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 12/ கடைசி.

கடந்த ஐந்து மாதங்களாக கொல்கத்தாவை என் ஊர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். கொல்கத்தா... கோவில்தானா என்று திகைக்க வைக்கும் காளிகாட், கங்கைக்கரை தக்ஷினேஷ்வர், அந்த நாளைய கல்கத்தாவை ஓவியங்களாய் பதிந்து வைத்திருக்கும் விக்டோரியா மெமோரியல், எல்லோருக்குள்ளும் இழையோடும் ரபீந்திர சங்கீத், சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பெருமையோடு நினைவுகூறும் ரே, பாதாள ரயிலும், பேருந்துகளும், டாக்ஸிகளும், ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாக்கள் போதாமல் இன்னும் ஆள் இழுக்கும் கை வண்டி,  நட்டநடு சாலையில் ஆமை வேகத்தில் நகரும் அரதப் பழசான ட்ராம், அது பாழாக்கிப் போட்டிருக்கும் பாதைகள்...

கணவர் உபயோகத்தில் இறகாட்டம் மிதந்த எங்கள் கார், இங்கே ஓட்டுனர் மற்றும் கொல்கத்தா சாலைகளின் உபயத்தில் கமர்கட்டாய் உருளுகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு சும்மா எட்டிப் பார்க்க வந்திருந்த போது இருந்த அளவு இப்போது போக்குவரத்து நெரிசல் இல்லைதான். ஆனாலும் அதற்குப் பழகிய ஓட்டுனர்களின் பொறுமையின்மை நேரம் வாய்க்கும் போதெல்லாம் காதைப் பிளக்க வைக்கிறது. அடிக்கும் மஞ்சளில் குட்டி யானைகளாய் ஓடும் டாக்ஸிகள். அளவுக்கு அதிகமாக மாசுப்பட்டிருக்கும் காற்று மண்டலம்.

இன்னமும் கொல்கத்தா என்ன மாதிரி ஊர் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஆச்சர்யங்களாய் நிறைந்திருக்கிறது. அதீத பக்தியும் நவீனமும் கலந்து கட்டி ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு முகம் காட்டுகிறது. மெட்ரோவின் பளபளப்பின் அடிநாதமாய் கலாச்சார சாயம் குறைவில்லாமல். செழிப்பும் வறுமையும் அதிக இடைவெளியில்லாமல் ஒரே ஓவியத்தில் அதனதன் இருப்பை நிலைநாட்டிக் கொண்டு.

பள்ளிக்கூடம் போகும் குழந்தைகள் வீட்டு வாசலில் ஆட்டோ ஏறி டாட்டா சொல்லிப் போகும் பழக்கம் முழுதாக வரவில்லை. இன்னும் அம்மாவோ வீட்டு வேலைக்காரரோ போய் விட்டு, கூட்டி வருகிறார்கள். பத்திரக்குறைவு தான் காரணம் என்பது ஒரு அம்மாவிடமிருந்து கேள்விப்பட்டது. பள்ளிக்கூடம் விடும் நேரம் ஒருவர் மேல் ஒருவர் முட்டிக் கொண்டு நெருக்கியடித்து வாசலில் காத்திருக்கும் பெரும் கூட்டம் எனக்குப் புதிதாய் இருக்கிறது.

ஷ சப்தம் அதிகமாய் ஒலிக்கும் பெங்காலி பாஷை. திட்டினால் கூட இனிமையாய் இருக்கும் என்ற பெருமை பெங்காலியர்களுக்கு. ரொஷகொல்லாவும் சந்தேஷ¤ம் உருளைக்கிழங்கும் மீனும். உருளைக்கிழங்குக்கு பேர் கூட வைத்திருக்கிறார்கள்... 'சந்திரமுகி'! மீனைக் கொண்டாடுவதிலும் குறைவில்லை. வந்த புதிதில் கவனத்தை ஈர்த்த ஒரு நகைக்கடை விளம்பரம் 'இரண்டாயிரம் ரூபாய்க்கு நகை வாங்கினால் ஒரு ·ப்ரெஷ் ஹில்ஸா இலவசம்!' ஹில்ஸா வேறொன்றுமில்லை, மீன்தான்! நகைக்கடையில் இருந்து வெளியே வரும் போது ஒரு கையில் நகை, இன்னொன்றில் மீன்... கற்பனை செய்து பார்க்க கொஞ்சம் வினோதமாகத்தான் இருந்தது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க... கொல்கத்தாவாசிகளின் அவசர உணவாகிவிட்ட 'ரோல்'. மைதா மாவினால் செய்த ஒரு பெரிய, சற்றே தடிமனான ரொட்டி. முட்டை போட்டோ, அல்லாமலோ, உள்ளே காய்கறியோ, கோழியோ, பனீரோ, இறைச்சியோ அடைத்து உருட்டி, கீழே ஒரு பேப்பர் நாப்கின் சுற்றி ரெடியாகி விடுகிறது. குறைந்த விலை. காத்திருக்கும் கூட்டத்தில் கூலிக்காரரும், டை கட்டின ஆசாமிகளும்.

தலைமுறை தலைமுறையாக இருக்கும் குஜராத்திகளும் மார்வாடிகளும் நேப்பாளிகளும். ப்யூட்டி பார்லர்களில் பெரும்பாலும் நேப்பாளிப் பெண்கள் ஆதிக்கம். எவ்வளவு பூஜா கொண்டாடுவீர்கள் என்ற என் கேள்விக்கு மாதம் ஒவ்வொரு பூஜாவின் பெயர் சொல்லிக் கொண்டு வந்த சிகை அலங்காரப் பெண்ணின் வரிசையில் சுபாஷ் ஜெயந்தியும் ஒரு பூஜா! என்னுடைய ஆச்சரியத்தைப் பார்த்து அதை இன்னும் உறுதிப்படுத்திச் சொல்கிறார்.

கொல்கத்தா பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. சிக்னலில் காத்திருந்த ஒரு நாள் சுவரொட்டியில் கண்ணில் பட்ட தெரசாவின் பெயர், மறந்தே போய் விட்ட எதையெதையோ நினைவு படுத்தியது. என்னுடைய ஐந்தாம் வகுப்பு அரைப்பரிட்சை ஜிகே பேப்பர் திருத்தின ஆசிரியர் தான் காரணமாயிருக்க வேண்டும். அந்தப் பரிட்சையில், கஷ்டப்படுபவர்களுக்கு எப்படி உதவுவாய் என்றோ என்னவோ ஒரு கேள்வி. கண் தெரியாதவங்களுக்கு உதவி செய்வேன். அவங்களுக்கு அப்படி, இவங்களுக்கு இப்படி என்று ஏதோ பதில் எழுதிய ஞாபகம்.

மூன்றாம் வகுப்பு வரை பக்கத்திலிருந்த நகராட்சிப் பள்ளியில் தான் படிப்பு. வீட்டுப் பாடமெல்லாம் எதுவும் கிடையாது. சாயந்திரம் பூராவும் விளையாடி விட்டு, ராத்திரி சாப்பாடு ஆனதும் வாசலில் பாய் போட்டு நானும் பாட்டியும் நிலாவையும் நட்சத்திரத்தையும் பார்த்துக் கொண்டே படுத்திருந்தது. திடீரென்று அடுத்த வருஷம் (தமிழ் மீடியம்னாலும்) கான்வென்ட்டில். முட்டி மோதி நாற்பதைத் தாண்டுவதே பெரிய விஷயம். அந்த அரைப் பரிட்சை ஜிகே பேப்பரில் 85 மார்க். அதுவும் வகுப்பில் முதல் மார்க். அப்போதிருந்து தான் சமூக சேவை என்று ஏதோ உள்ளுக்குள்ளே உதித்திருக்க வேண்டும். பெரியவளானதும் தெரஸா மாதிரி ஆகப்போகிறேன். அது செய்யப் போகிறேன், இது செய்யப் போகிறேன் என்று ஏதேதோ கனவுகள். ஆனால் யார்கிட்டயும் மூச்சு விட்டதில்லை. கேலி செய்வார்கள் என்ற பயம் தான்.

கல்யாணமே பண்ணிக்க போறதில்லை என்று நினைத்ததற்கு படிக்க படிக்கவே கல்யாணம். அதைத் தொடர்ந்த பொறுப்புகள், ஓட்டங்கள். என்னுடைய நேரங்கள் எல்லாருடையதாகிப் போக... என்னுடைய முடிவுகள் எல்லோரையும் அனுசரித்ததாக. இப்போது சட்டென்று பொறுப்புகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது போலிருக்கிறது. பதினெட்டு வருடங்களுக்கு முன் அப்பாவின் நிழலிலிருந்து கேள்வியே இல்லாமல் கணவருடைய நிழலுக்கு மாறிய நான்...
இப்போதைய நான்... ரொம்பத்தான் மாறிவிட்டிருக்கிறேன். வாழ்க்கையும். இப்போது எல்லா நேரமும் என்னுடையதாய். ஆனால் எதுவும் செய்ய இஷ்டமில்லாமல் விலகி நின்று கை கட்டி வேடிக்கை பார்க்கிறது மனம். ஏனோ இந்த முறை அதைத் தொந்தரவு செய்யத் தோணவில்லை.

ஆனாலும் எதையோ எதிர்பார்த்திருக்கிறது. இந்த முறை யாரால், எப்படி, என்ன என்று. சென்ற முறை லேடிஸ் க்ளப்பில் சந்தித்த மிஸஸ். மொஹந்தியோ, கணவருடைய அலுவலக விருந்தில் சந்திக்கும் யாராவதோ, வழக்கமாக போகும் சிட்டி சென்டரில் எதிர்படும் யாரோ, எதாவது செய்தித்தாள் விளம்பரமோ, என்னுடைய அஞ்சல் வழி கல்வியோ... எதாவது என் பாதையை மாற்றி எனக்கு எதையாவது அறிமுகப்படுத்தலாம். காத்திருக்கிறேன், அந்த முகம் தெரியாத மனிதருக்கு. அந்த மாற்றத்திற்கு.

Wednesday, June 10, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 11

வழக்கமாக எல்லா ஊர்களையும் போலத்தான் பள்ளிக்கூடம் தேடும் படலம் தொடங்கியது. வழக்கம் போல பெயருக்கு ஒரு நுழைவுத் தேர்வு, டொனேஷன் பேரம், ஒரு நேர்முகத் தேர்வு. வழக்கமான கேள்விகள்... வழக்கமான பதில்கள். எல்லாம் முடிந்து, இனி கிளம்ப வேண்டியது தான் என்று எழுந்திருக்கும் போது தான் வழக்கமே இல்லாமல் அது நடந்தது.

"எங்கள் பள்ளிக் கூடத்தில் ஆசிரியராக பணியாற்ற விருப்பமா?"

அந்தக் கேள்வியை நம்ப முதலில் சிரமமாக இருந்தது. இதற்கு முன்னால் இப்படிஒரு கேள்வியை யாரும் கேட்டது இல்லை. கேட்டிருந்தாலும் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் இப்போது அப்படி ஒரு அவசியமில்லாமல் இருந்தது. ஒரு நிமிட தயக்கத்திற்குப் பிறகு சட்டென்று சரி சொன்னது மட்டுமல்லாமல் கடைசியில் எவ்வளவு சம்பளம் கொடுப்பீர்கள் என்று கேட்டது நானா என்று இப்போதும் ஆச்சரியம்! என்னுடைய நேர்முகத் தேர்வு உடனே ஆரம்பித்தது. சின்னச் சின்ன ஒன்றிரண்டு கேள்விகளுக்கு ஏதோ நீள நீளமாய் பதில் சொல்ல, கொஞ்சம் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கணவரின் முகத்தைத் தவிர வேறெதும் சரியாக நினைவில்லை.

சீக்கிரம் தெரிவிக்கிறோம் என்று சொல்லி அனுப்பிய போது அந்த காத்திருத்தல் பழக்கமில்லாததாக இருந்தது. வீட்டில் தொலைபேசி இணைப்பு கிடைத்திருக்கவில்லையானதால் கணவரின் செல்பேசி எண்ணைத்தான் கொடுத்திருந்தோம். ஒரு வாரத்தில் நான் கோவை சென்றுவிட, அந்த நினைவு சற்றே விலகியிருந்தது. ஆனாலும் கணவரோடு பேசும் போதெல்லாம் கேட்க மறக்கவில்லை. திரும்பி வந்த ஒரு வாரத்தில் பள்ளிக்கூடம் தொடங்கி விட்டது. எந்த அழைப்பும் வரவில்லை! ஒன்றிரண்டு முறை நானாவது கூப்பிட்டு விசாரித்திருக்க வேண்டுமோ என்று அப்புறமாகத்தான் உதித்தது! ஆனாலும் நேரம் கடந்து விட்டது. வேலைக்குப் போகப் போகிறேன் என்ற நினைப்பு சுகம் மட்டுமே அனுபவிக்கக் கிடைத்தது.

எல்லாம் மறுபடியும் வழக்கம் போல. காலையில் எல்லோரும் கிளம்பிப் போய் விட டிவி, இணையம், அழைப்பு மணி அடித்து எட்டிப் பார்க்கும் பால்காரர், வேலைக்காரம்மா, பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வரும் பிள்ளைகள், ஒவ்வொருவராக டியூஷன் வகுப்புகளுக்கு செல்வதும், திரும்பி வருவதுமாய்... நாள்பூராவும் இதுவே. இடையில் வந்த ஆசிரியர் வேலை ஆசை எல்லாவற்றையும் கலைத்து போட்டு விட்டது போலிருந்தது. இரண்டு மூன்று மாதம் அந்த பாதிப்பில் வேறு வேலைகள் கூடத் தேடி... பின் மெல்ல எல்லாம் இயல்பானது. மறுபடியும் பழைய வாழ்க்கை பழகிப் போனது.

டிசம்பர் மாதம் முதல் வாரம் ஆபிஸிலிருந்து வந்த கணவர் 'சொல்லவே மறந்துட்டேன்! ஸ்கூல்ல இருந்து உன்னைக் கேட்டு போன் வந்தது. வேலையில சேர விருப்பம்னா ஞாயிற்றுக் கிழமை காலைல வரச் சொன்னாங்க' என்ற போது சந்தோஷத்தை அடக்கி வைப்பது சுலபமாயிருக்கவில்லை. இந்த முறை என்னை ஏமாற்றாமல் வேலை கிடைத்து விட்டது. முப்பத்தி ஐந்து வயதில் முதல் முதலாக வேலைக்குப் போகும் அனுபவம்! இரண்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கு ஆசிரியராக. இந்த அனுபவங்களை ஏற்கனவே கொஞ்சம் எழுதியிருக்கிறேன் என்றாலும் எப்போது யோசித்தாலும் புதிது புதிதாய் எதாவது நினைவுக்கு வரத்தான் செய்கிறது!

முதல் நாள்... குழந்தைகளுக்கு அரைப் பரிட்சை தொடங்கும் நாள். ஐம்பது மிரண்ட முகங்களுக்கு முன்னால் ஐம்பத்தி ஒன்றாக நான். பேப்பரைக் கொடுத்து, கேள்விகளை எழுதிப் போட்டு, என் கையெழுத்து புரிகிறதா என்று திரும்பத் திரும்பக் கேட்டு, கடைசி நிமிஷம் வரை எழுத நேரம் கொடுத்து... மணி அடித்ததும் எல்லோரும் அவசர அவசரமாக பேப்பரை வீசிவிட்டு ஓடி விட எண்ணிப் பார்த்தால் நான்கு பேப்பர் குறைந்திருந்தது! வரிசைப் படி முதலிலேயே வாங்க ஆரம்பித்திருக்க வேண்டும் என்ற சாதாரண யோசனை கூட எனக்கு இல்லாதது உரைத்தது.

தொடர்ந்த நாட்களில் என்னுடைய தவறுகளில் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு ஆசிரியர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு அம்மாவாக எதிர்பார்த்தேனோ அதையெல்லாம் செய்வது எவ்வளவு சிரமம் என்று அப்போது தான் புரிந்தது. நான் செய்ய நினைத்ததையும் செய்ய முடியாமல் முடிக்க வேண்டிய பாடங்களும் மற்ற வேலைகளும் ஆக்ரமித்துக் கொண்டது.

அந்த நாட்களில் என் குழந்தைகள் என்னை எனக்கு அடையாளம் காட்டினர். எனக்கு என்ன தெரியும் என்ன தெரியாது என்பதை உணர வைத்தனர். அவர்களுடைய உலகத்தை எட்டிப் பார்க்க, உட்கார்ந்து ரசிக்க எனக்கு அனுமதி கிடைத்தது. சந்தோஷமான நாட்கள் சொந்தமானது. என்னுடைய ஆர்வமும் வேகமும் சிலரைத் தொற்றிக் கொண்டது என்றாலும் என்னால் எந்த மாற்றமும் செய்ய முடியாத குழந்தைகளும் இருந்தன.

பள்ளிக் கூடத்தில் வேண்டாமென்று விலக்கியது போக மீதமான பாடங்களே அந்த வயதுக் குழந்தைகளுக்கு அதிகம் என்று எனக்குப் பட்டது. ஒரு நாளின் ஒரு வகுப்பைக் கூட வேறெதற்கும் உபயோகப் படுத்த முடியாத வகையில் இழுத்துப் பிடித்த பாடத்திட்டங்கள். பாடங்களைத் தாண்டி அந்த குழந்தைகளைப் புரிந்து கொள்ள நேரமில்லாதது பெரிய குறையாக இருந்தது. குழந்தைகளை விட அவர்களின் பெற்றோர்கள். அவர்களுடைய அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு. அது திருட்டுத்தனம் செய்தாவது முதல் மதிப்பெண் வாங்கத் தூண்டியதும்... ஆறேழு வயதுக் குழந்தைகளுக்கு இத்தனை சிரமங்கள் தேவையேயில்லை.

நான்கு மாதங்கள் முடிந்தது. நிறுவனத்தின் சமூகத்தைச் சாராதவர்கள் பதினொரு மாத ஒப்பந்தத்தில் வேலைக்கு அமர்த்தப் பட்டிருந்தோம். மறுபடியும் புதிதாக விண்ணப்பித்து தேர்வு செய்வது நடைமுறை. ஏப்ரல் மாதம் கடைசி தேதி வெளியே வரும் போது அடுத்த வருஷம் இந்த வேலை எனக்கு எவ்வளவு அவசியம் என்று எப்படி, யாருக்குச் சொல்லிவிட்டு வர என்று தெரியவில்லை. வெளியே வந்த எல்லோருக்கும் ஒரு வகையில் வேலை அவசியமாயிருக்கையில் எனக்கு வேறு வகையில் அத்தியாவசியமாயிருந்தது.

ஜூன் முதல் வாரம் ஊரில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு தாமதமாக வந்த போது இந்த முறையும் எந்தத் தகவலும் இல்லை. ஆனால் இந்த முறை எந்தத் தயக்கத்திலும் இழக்க விரும்பாமல் போய் கேட்ட போது எனக்கு டபுள் ப்ரமோஷன் கிடைத்திருந்தது! நான்காம் வகுப்பு ஆசிரியராக. பாதிக் கண்களில் உனக்கு எப்படி அந்த வகுப்பு கிடைத்தது என்ற கேள்வி... சிலரின் ஐயோ பாவம் என்ற பார்வையும். பிறகுதான் தெரிந்தது என் வகுப்பில் பிரின்ஸிபலின் மகள் படிப்பது!

இரண்டே வயது பெரிய இந்தக் குழந்தைகள் என் எண்ணங்களை எல்லாம் தூள் தூளாக்கினர். சொல்லிக் கொடுக்க வேண்டிய வகையில் சொல்லிக் கொடுத்தால் எதையும் கற்றுக் கொள்வோம் என்று நிரூபித்தார்கள். எங்கேயோ எப்போதோ மேலோட்டமாக படித்திருந்த விபரங்களை அவர்களுக்காக என்னைத் தேடித் தெளிவாகத் தெரிந்து வரச் செய்தார்கள். கேள்விகள்... கேள்விகள்...! இப்போதும் அதே விரட்டும் பாடத்திட்டங்கள் இருந்த போதும் நாங்கள்(நானும் என் மாணவர்களும்) நேரம் ஒதுக்கப் பழகியிருந்தோம்.

ஒரு முழு வருடம். நிறைய சந்தோஷங்கள். கொஞ்சம் மன வருத்தங்கள். நிர்வாகத்தின் குளறுபடிகள். பணம் புகுந்து விளையாடி காண்பிக்கும் வேடிக்கைகள்... என்னால் எதுவும் செய்ய முடியாத போது அதில் ஒரு பங்காக இருக்க விரும்பவில்லை. அடுத்த வருடத்திற்கு உயர்நிலை வகுப்பிற்கு விண்ணப்பித்திருந்த போதும், அதற்கான முறையான கல்வித்தகுதி இல்லாத போதும் எனக்கு அந்த வேலையைக் கொடுக்க நிர்வாகம் சம்மதித்த போதும்
ஏற்கவில்லை. ஒருவேளை நிர்வாகத்தின் இடத்தில் இருந்து பார்த்தால் அவர்கள் நிலமை புரிந்திருக்குமோ என்னவோ?!

மொத்ததில் சூரத் வாழ்க்கையில் அளவில்லாமல் அடைந்தது மட்டுமே. இழந்தது... எதுவுமில்லை.

Tuesday, June 09, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 10

ஒரிஸ்ஸாவில் இருந்த இரண்டு வருடங்களில் அது ஏனோ ஒரு துண்டிக்கப் பட்ட இடம் போலவே இருந்தது. ஒரு பத்து வருஷம் மெதுவாக நடந்து கொண்டிருப்பது போல. புவனேஷ்வர் கூட ஒரு மாநில தலைநகருக்கான லட்சணங்கள் எதுவும் இல்லாமல். சுத்தமான காற்று, விலைவாசி குறைவு, எளிமையாக மக்கள்... எல்லாம் நல்லதாகவே இருந்த போதும் எதுவோ ஒன்று ஒட்டாதது போன்ற உணர்வு. தனித்திருப்பது போன்ற தோணல். அது விரட்டின விரட்டல் முதல் முதலாக இணையத்திற்குள் நுழைய வைத்தது.

நல்ல நட்பு வேண்டும் என்ற தேடலோடு தொடங்கிய பயணத்தில் ஆரம்பத்தில் அதைத் தவிர எல்லாம் கிடைத்தது. அந்த நாட்களில் ஒரு நண்பர் முலம் 'தினம் ஒரு கவிதை' அறிமுகமானது. அவரே ஆர்கேகே யின் சுட்டியும் தந்தார். எனக்கு எவ்வளவு பெரிய வாசலைத் திறக்கிறார் என்று அப்போது நிச்சயம் நினைத்திருக்க மாட்டார்.

என்னுடைய முதல் கவிதை... அதைப் பிரித்துப் போட்டு சொல் சிக்கனம் சொல்லித்தந்தது... முதல் கதை... என்னவோ என்னுடைய எழுத்தில் 'நான்' தெரியாமல் மறைந்து சாமர்த்தியமாக எழுதிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த என் நினைப்பைப் போட்டு உடைத்து என்னை என் கூட்டிலிருந்து வெளியே இழுத்தது... இப்படி தெரிந்தோ தெரியாமலோ எனக்குள் நிறைய பாதிப்பை ஏற்படுத்தியவர்கள். இதுவெல்லாம் மட்டுமே ஒரிஸ்ஸா வாழ்க்கையின் கொஞ்சமே கொஞ்சம் நிறங்கள்.

பிள்ளைகள் பாடங்களோடு போராடிக் கொண்டிருக்க, ரொம்ப ஜோராக தொடங்கிய வேலை ஏதேதோ அனுமதி கிடைக்காததால் ஆறு மாதத்தில் நின்று போய் விட ஒரு வருஷம் வீட்டில் இருந்து போரடித்துப் போயிருந்த கணவர் சூரத்திற்கு மாற்றல் கிடைத்ததும் ஒரு ஜனவரியில் 'விட்டால் போதும்' என்று கிளம்பிப் போய்விட பரிட்சை முடியும் வரை நாங்கள் அங்கேயே இருக்க வேண்டி வர... அந்த நாட்களில் இணையக் குழுக்கள் தான் எல்லாமுமாயிருந்தது.
எங்கேயோ ஒரு ஓரத்தில் அமர்ந்து எல்லாவற்றையும் வெறும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

மே மாதம் பரிட்சை முடித்து பாலேஷ்வரிலிருந்து கிளம்பும் போது வழக்கமாக வரும் யாரையாவது பிரிந்து போகும் வருத்தம் முதல் முறையாக இல்லாமல் போனது. மனிதர்களோடு நெருங்கியது காந்திதாமோடு முடிந்து விட்டது. எதிலும் ரொம்ப பிடிப்பில்லை. யார் மீதும் பெரிய ஒட்டுதல் இல்லை. அப்படி நான் ஆகிப் போய் விட்டது சரியோ, தவறோ... ஆனால் அப்படித்தான்!

பத்து வருடங்கள் கழித்து மறுபடியும் சூரத். முதல்முறையாக ஏற்கனவே இருந்த இடத்திற்கு மீண்டும். நாங்கள் போய்ச் சேர்ந்த போது வெறும் நூறு கிலோமீட்டர் தூரத்தில் பரோடாவும், கோத்ராவும் கொதித்துக் கொண்டிருந்தது. மறுபடியும் எத்தனை கலவரங்களோ...எத்தனை சாவுகளோ என்ற யோசனையோடு தான் தொடங்கியது. ஆச்சர்யமாக சூரத்தில் அதன் நிழல் கூட இல்லை.

பரட்டைத் தலையும் மூக்கு ஒழுக்கலுமாய் நாங்கள் விட்டுப் போன சூரத் இடையில் வந்து போன ப்ளேக்கில் முற்றிலும் மாறி விட்டிருந்தது. எங்கே பார்த்தாலும் பளிச்சென்று சுத்தமாய், சாலைகள் அகலமாய், புதிய பாலங்கள், கொழிக்கும் செல்வம். புதிது புதிதாய் விரிந்திருக்கும் குடியிருப்புகள்... ஷாப்பிங் சென்டர்கள்... திரும்பின பக்கமெல்லாம் விதவிதமாய் பாஸ்ட் புட் ஜங்சன்கள்... கூட்டம் கூட்டமாய் கவலையில்லாமல் சாப்பிடும் சுர்த்திகள்! வாழ்க்கையை அனுபவிக்கும் மனிதர்கள் என்று நிச்சயமாய் சொல்லலாம். ராத்திரி பத்து மணிக்கு மேல் நீண்ட சாலைகளின் இரண்டு பக்கமும் போட்டிருக்கும் பெஞ்சுகளெல்லாம் நிறம்பி வழியும். அந்த நேரத்திலும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டு குடும்பத்தோடு பொழுதைக் கழித்துக் கொண்டு.

ஞாயிற்றுக் கிழமை மாலை சூரத் விழாக் கோலம்தான். யாரும் வீட்டிலேயே இருக்க மாட்டார்களா என்று நினைக்க வைப்பது போல அத்தனை மக்களும் வீதியில் தான். டுமஸ் ரோடு பூராவும் கார்கள் அணிவகுப்புதான். பாய், மடக்கு நாற்காலி சகிதம் குடும்பங்கள் ஆஜராகிவிடும். எந்தக் கூச்சமும் இல்லாமல் கீழே உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோரை வேடிக்கை
பார்த்துக் கொண்டும் தெரிந்தவர்கள் எதிர்படும் போது அரட்டையிலும். வீட்டிலிருந்து கொண்டு வந்தது... அங்கேயே வாங்கியது என்று மறுபடியும் சாப்பாடு... சாப்பாடு! இத்தனை சாப்பிட்டும் இவர்கள் இளம் வயதில் எப்படி இப்படி வெடவெட வென்று இருக்கிறார்கள் என்பது இன்னும் தெளியாத ரகசியம். ஆனால் நடுத்தர வயதுக்கு மேற்பட்டோர் எல்லா இடங்களையும் போல டயபடீஸூம் உடல் பருமனுடனும்.

முதலிலே இருந்த இடமென்றாலும் முற்றிலும் புதிதாய் இருந்தது. ஒவ்வொன்றாகத் தேடித் தெரிந்து கொண்டிருந்த போது சூரத் வாழ்க்கை மறக்க முடியாத நினைவுகளுக்குச் சொந்தமாக்கப் போகிறது என்று அப்போது உணர்ந்திருக்கவில்லைதான்!


Monday, June 08, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 9

'சாவு தூண்டும் முதல் உணர்வு செக்ஸ்' என்று உஷா சுப்ரமணியம் கதையில் (காக்கைச் சிறகினிலெ) படித்தது. அதற்கு ஒரு சின்ன விளக்கம் கூட கொடுத்திருந்தார். நம்ம ஊர்ப்பக்கம் நெருங்கின சொந்தம் யாராவது இறந்து போய் விட்டால் 'கவலைப்படாதே அவங்களே உனக்கு குழந்தையா பிறப்பார்கள்' என்று சொல்வதும், 'குழிப்பிள்ளை மடியிலே' என்பதுமாய். குஜராத் சாவுகள் தந்தது பத்திரமின்மையா? நிலையில்லாமையா? நாளையை எனக்குத்
தெரியாது... இன்றைக்கு ஒன்றாக இருப்போம், அது எங்கேயாக இருந்தாலும் சரி என்று தான் தோன்றியது. அதற்காகத்தான் செட்டில் ஆகிவிடும் எண்ணத்தோடு கோவை வந்த முடிவை மாற்றிக் கொண்டு ஒரிஸ்ஸா கிளம்பியது.

பரிட்சையெல்லாம் முடிந்து ஒரிஸ்ஸாவிற்கு குடித்தனம் போனதென்னவோ மே மாதம் தான். ஆனால் மார்ச் மாதமே 'ஊர் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வரேன்' என்று கிளம்பிவிட்டேன். (இதற்கு முன்னால் எந்த ஊர் எப்படி இருக்கிறது என்று பார்த்துத் தான் போனது போல!) குழந்தைகளை நாங்க பார்த்துக்கறோம், நீ ஜோரா போயிட்டு வான்னு அப்பாவும் அனுப்பி
விட்டார்.

ஒரு மத்யானம் பாலேஷ்வர் போய் இறங்கிய போது சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் நடக்க ஏற்பாடு ஆகிக் கொண்டிருந்தது. ஐந்து வருஷத்திற்கு முன்பு அவர் இப்போது பேசும் அளவு கூட ஹிந்தி பேசுபவரில்லை. கூட்டத்திற்குப் போய்க் கொண்டிருந்தவர்களுக்கு ஒரியாவைத் தவிர வேறு எதுவும் புரியும் போலவும் தெரியவில்லை. ஆனாலும் போய் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்த போது கூட்டம் என்று ஏனோ தோண்றவில்லை. மந்தை சரியான வார்த்தையாயிருக்கும்.  நீண்ட ஒலிப்பான்களின் பாதிப்பே இல்லாமல் நகரும் ஜனங்கள். லேசாக யாராவது மேல் முட்டி விட்டால் முஷ்டியை உயர்த்தி விடுவார்கள் என்று எதுவோ உள்ளுக்குள் சொன்னது. அதிகம் விபரமில்லாமல், அதனாலேயே ஒரு முரட்டு வேகத்துடன்.

கணவருடைய பணியிடம் பாலேஷ்வரிலிருந்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில்  தாம்ராவில் (Dhamra). வழியெல்லாம் ஒரே பச்சை. சட்டென்று கேரளாவை நினைவு படுத்தியது. நகரத்தில் இருந்து விலக விலக வீடுகள் தனித்தனியாய். வீட்டைச் சுற்றி ஒரே செடி கொடிகள், எந்தப் பராமரிப்பும் இன்றி. தனித்தனியாக குளம் கூட. அந்த அழுக்குக் குளத்திலேயே குளியல்,
துவையல் எல்லாம். கொஞ்ச தூரத்திற்கொன்றாய் அடி பம்புகள், குடிதண்ணீருக்காக. மேல் சட்டை இல்லாமல் வெறும் துண்டோ வேஷ்டியோ மட்டும் அணிந்த ஆண்கள். பெரும்பாலான பெண்கள் இன்னும் ஜாக்கெட்டுக்கு மாறவில்லை. பாதிக் குடித்தனம் தெருவில். ரோட்டில் நெல் காய்கிறது. சௌகரியமாக உட்கார்ந்து அரட்டை. வண்டி எதாவது வரும் போது மெதுவாக யோசித்து நகர்ந்து வழி விட்டு மறுபடியும் தொடர்கிறது.

தாம்ரா ஒரு நதிக்கரை கிராமம். தங்குவதற்கு... முன்பிருந்த கம்பெனி விட்டுப் போன போர்டா கேபின், எல்லா வசதிகளுடன். பெரிய வெட்ட வெளியில் நிலத்தை மெஷின்கள் சமன்படுத்திக் கொண்டிருக்க குழந்தை குட்டிகளோடு அக்கம் பக்க குடித்தனம் அத்தனையும் அங்கேதான். வேடிக்கை பார்க்க. சங்கு வளையலோ வகிட்டில் குங்குமமோ இல்லாத எனக்கும் என் கணவருக்கும் என்ன உறவு என்று அங்கிருந்த பெண்களுக்கு பெரிய சந்தேகம். கடைசியில் ஹிந்தியைக் கடித்துக் குதறி கேட்டே விட்டார்கள். பதில் என்னவோ அவர்களுக்கு ஜீரணிக்க முடியவில்லைதான்! சங்கு வளையலில்லாமல் எப்படி நீ பெண்டாட்டி என்று!

பள்ளிக்கூடத்திற்காக மறுபடியும் நாங்கள் பாலேஷ்வரிலும் கணவர் தாம்ராவிலும் தங்க வேண்டியிருந்தது. பாலேஷ்வர் பெரிய ஊரில்லை என்றாலும் மோசமில்லை. குஜராத்தில் எந்த மூலையில் இருந்தாலும் ரயில் நிலையத்திலாவது தமிழ் புத்தகங்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. பாலேஷ்வரில் எவ்வளவு முட்டியும் எதுவும் நடக்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபடியும் தமிழ் புத்தகங்கள் இல்லாமல்.

ஒரிஸ்ஸாவில் மனதைக் கவர்ந்த ஒரே விஷயம் கோனார்க். வழக்கமாக எந்த ஊரில் இருந்தாலும் சுற்றிலும் உள்ள முக்கியமான இடங்களைப் பார்க்கக் கிளம்புவது போலத்தான் பூரி, கோனார்க் பயணமும் போனது. தங்கியது பூரியில். அது தான் குறிப்பிடத்தக்க இடம்...கோனார்க் ஏதோ பக்கத்தில் இருக்கும் சின்ன இடம் என்று தான் நினைத்திருந்தேன். பார்த்த பின்பு... அது பிரமிக்க வைத்தது.

கலிங்கத்துப் போரில் பெருமளவில் உயிர்ச்சேதம் அடைந்ததில் மக்கள் இல்வாழ்க்கையை மறந்து போனதில் (இங்கே சாவு எண்ணிக்கை ரொம்ப அதிகமல்ல... அதான் அந்த முதல் வரி தியரி உல்டாவாயிடுச்சு போலயிருக்கு!) மீண்டும் அவர்களுடைய மனநிலையை மீட்டுக் கொண்டு வர கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது. கோனார்க்கில் இப்போது மிச்சம் இருப்பது பாதி கூட இல்லை. ஆனாலும் ஒவ்வொரு சின்ன சின்ன செதுக்கலும் ஏதோ ஒரு விஷயம் பொதிந்து வைத்திருக்கிறது. அந்த கால வாழ்க்கை முறை, அது என்ன அவசியத்திற்காக கட்டப் பட்டதோ அந்த செய்தி எல்லா இடங்களிலும் விரிந்து பரந்து கிடக்கிறது. அங்கே இருக்கும் வழிகாட்டிகள் பலருக்கு அதிகம் விஷயம் தெரியவில்லை. தெரிந்தவர்களும் விளக்கமாக சொல்ல விரும்புவதில்லை.

மனிதர்களின் வியாபார வேகத்தில் அதிகம் சிதைக்கப் படாமல், அதனாலேயே அது தன்னை நோக்கி இழுக்கும் ஈர்ப்பை இழக்காமல் இருப்பது போல இருக்கிறது. நாலு வருடத்திற்கு முன்பு பார்த்தது. அதை முதல் முதலாக பார்த்த போது உணர்ந்ததை இப்போதும் உணர முடிகிறது. அந்தி நேரச் சூரியன், சந்திரனின் முதல் கிரணம், நல்ல பௌர்ணமி நிலவு, அதிகாலைச் சூரியன்... ஓவ்வொரு ஒளியில் அது என்ன நிறம் கொள்ளும் என்று பார்க்கும் ஆவலை அந்த சிதைந்த கோபுரம் தூண்டுகிறது.

யாருடைய குறுக்கீடும் இல்லாமல் தனியே ஒரு தரம் போக வேண்டும். அது பொதிந்து வைத்திருப்பதை அதுவே திறந்து காட்டும் வரை பொறுமையாக காத்திருந்து பார்க்க ஆசை. அது எனக்கு ஒரு காதலனைப் போல!

Sunday, June 07, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 8

பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போதே விளையாடப் போக வேண்டிய முஸ்தீபுகளெல்லாம் முடித்து விட்டுத்தான் வருவான் மகன். வந்து பால் குடித்து, சட்டை மாற்றுவதற்கு முன்னால் நண்பர்கள் பட்டாளம் வாசலில் நின்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிடும். அன்றைக்கு வந்தவன் ஏனோ அமைதியாக ஸோபாவில். கால் இரண்டையும் கட்டிக் கொண்டு தனக்குத்தானே பேசிக்
கொண்டு. நான் கடந்து போகும் போது கொஞ்சம் சத்தமாக.

என்னதான் சொல்கிறான் என்று கொஞ்சம் கவனிக்க முயன்ற போது, எனக்குக் கேட்கட்டும் என்று அவன் முனங்கியது, "எப்பதான் இங்கயிருந்து ட்ரான்ஸ்வர் ஆகுமோ?"

ஆச்சரியம்தான். எப்போதும் மாற்றல் ஆகும் போது "இப்பத்தான் எங்க க்ரூப் சேர்ந்திருக்கு, அதுக்குள்ள போகனும்னு சொல்றியேன்னு" சலிப்பதுதான் வழக்கம்.

"என்னடா ஆச்சு?" என்று கேட்கத்தான் காத்திருந்தான்.

"என் ப்ரெண்டு ஒரு விஷயம் சொன்னான். அது நிஜமாகறதுக்குள்ள நம்மெல்லாம் இங்கிருந்து போயிடனும்"

"என்ன சொன்னான்?"

நீட்டி முழக்கி உடைந்த தமிழிலும், ஹிந்தியிலும் அவன் சொன்னது, "ஜெசல், தோரல் ரெண்டு பேரும் லவ்வர்ஸாம். அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேராம செத்துப் போயிட்டாங்களாம். அவங்களைப் பொதைச்ச எடத்தில ரெண்டு கல்லு இருக்காம். அது ரெண்டும் கொஞ்சம் கொஞ்சமா பக்கத்தில வந்துட்டிருக்கு. எப்ப அது ரெண்டும் முட்டுதோ அப்ப பூமி வெடிச்சிடுமாம். இன்னும் கொஞ்ச நாள்ல அது முட்டப் போகுது. நாம அதுக்குள்ள இங்கயிருந்து போயிடனும்"

"இதெல்லாம் சும்மா சொல்ற கதைடா கண்ணு. அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது. நீ போய் விளையாடு" என்று நான் சொன்னதில் அவனுக்கு திருப்தியேயில்லை. என்னை விட்டு விட்டு அவனுடைய அக்காவைப் பிடித்துக் கொண்டான். இரண்டு பேரும் அந்த வயதுக்கே உள்ள ஆர்வத்தோடும் பயத்தோடும் அதன் பின்விளைவுகளைப் பற்றிப் பேசுவதுமாய். இரண்டு மூன்று நாள் அதே நினைவாயிருந்தான். கொஞ்ச நாளில் அது மறந்தே போய்விட்டது.

பள்ளிப் படிப்பு, கம்ப்யூட்டர் வகுப்பு எல்லாம் பாதியில் இருக்க, 99 செப்டம்பர் அடுத்த மாற்றல். இரண்டு கைகளிலும் அள்ளிச் சுமந்ததும், உதற முடியாமல் முதுகில் சுமத்தப்பட்டதுமாய் நினைவுகள்.

அடுத்ததாக போக கணவருக்குத் தோதான வேலை எதுவும் இல்லாததால், கம்பெனி சென்னையில் வந்து தலைமை அலுவலகத்தில் கொஞ்ச நாள் இருக்கச் சொன்னது. அதுவும் சில மாதங்களுக்கு மட்டுமேயானதால் எங்களுக்கு (நானும் குழந்தைகளும்) கோவைக்குப் போவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. சொந்த ஊர், சொந்த வீடு... போதும் சுற்றியது, கம்பெனி வழக்கப்படி குழந்தைகளோடு ஊரிலேயே இருந்துவிடும் யோசனையில் தான் தொடங்கியது கோவை வாழ்க்கை, ரொம்ப எதிர்பார்ப்போடு.

காந்திதாமில் கூட இருந்து சொல்லிக் கொடுத்த அப்பா, கோவையில் ஸ்கூட்டியைத் தொடவிடவில்லை. எங்கே போனாலும் தொடர்ந்து கொள்ளலாம் என்று சொன்ன கம்ப்யூட்டர் வகுப்பு ஏ சென்டர், சி சென்டர் என்று ஏதேதோ காரணம் சொல்லி கைவிரித்து விட்டது. கல்யாணம், காதுகுத்து, கருமாதி, டிவி, வம்பு.... மூச்சடைக்க ஆரம்பித்து விட்டது.

நான்கு மாதம் கழித்து, ஜனவரி 26 ம் தேதி காலை என்டிடிவி வெறும் தகவலாக சொல்ல ஆரம்பித்து தொடர்ந்த செய்தி... பத்து நாட்கள் நேரம் காலம் இல்லாமல் டிவியே பழியாகக் கிடந்தது... பார்க்கவும் முடியாமல், பார்க்காமல் இருக்கவும் முடியாமல்... அந்த இருநூற்றைம்பது குழந்தைகளை முழுசாக விழுங்கிய அஞ்சார் தெருக்களில் எத்தனை முறை நடந்திருக்கிறேன். பத்தடி அகலம் கூட இல்லாத தெருக்கள். காரெல்லாம் அதிகம் ஊருக்கு உள்ளே போக முடியாது. ஒரு ஆட்டோ போகும் போது எதிரில் இன்னொன்று வந்தால்
பக்கத்தில் இருக்கும் வீட்டு படியில் சரிந்து ஏறித்தான் வழிவிட வேண்டும். அடுக்கடுக்காக உயர்ந்த கருங்கல் கட்டிடங்கள், அவ்வளவு மலிவாக கிடைக்கும் துணிகளை வாங்க எங்கிருந்தெல்லாமோ வரும் ஜனக்கூட்டம், அத்தனை வருமானம் இருந்த போதும் மாறாத, மாற்ற முடியாத ஊரின் அமைப்பு...

அந்த செப்டம்பர் மாத மாற்றலே கேட்டு வாங்கியது. நவம்பருக்கு மேல் கணவருடைய வேலை முடிந்தால் கட்டாயம் நானும் குழந்தைகளும் அந்த வருஷம் படிப்பு முடியும் வரை தனியாக அங்கே இருந்திருக்க வேண்டும். அதை தவிர்க்க எதிர்பாராமல் கேட்ட நேரம் மாற்றம் கிடைத்து நாங்கள் இங்கே வந்துவிட... யாரோ காய்களை நகர்த்தி நீ இங்கேயிருந்து போய் விடு, நீ இங்கேயே இரு என்று செய்தது போல. ராஜுலாவில் கூட இருந்த ஒரு குடும்பம், மோசமாக பாதிக்கப்பட்ட இன்னொரு இடமான பச்சாவ்(Bachchau) என்ற ஊரில். இரண்டாவது மாடி கட்டிடம் சரியத் தொடங்க மனைவியையும் மூத்த மகளையும் மற்றவர்களோடு கயிற்றைப் பிடித்து இறங்கச் சொல்லி விட்டு கணவர் உள்ளே உறங்கும் இரண்டாவது மகளை தூக்கப் போகும் போது அவள் கண் முன்னால் புதைந்து போனது....

கேட்டது, பார்த்தது எதுவும் 'நல்லவேளை நாம தப்பிச்சுட்டோம்' என்று நினைக்க வைக்கவில்லை. இதில் எந்த இடத்திலும் நாங்கள் யாராவது இருந்திருக்க எல்லா சாத்தியங்களும் இருந்திருந்தது. புதைந்து போயோ, புதைய விட்டுத் தவித்தோ. தொடர்ந்த நாட்களில் உள்ளுக்குள் கேள்விகள்... கேள்விகள். நான், என்னுடையது... எல்லாவற்றையும் அசைத்துப் போனது. எல்லாம் அடங்கிய போது... கொஞ்சம் அடைந்திருந்தேன், கொஞ்சம்
இழந்திருந்தேன்.

மார்ச் மாதம் கணவரை ஒரிஸ்ஸாவிற்கு மாற்றிய போது இரண்டாவது யோசனையில்லாமல் கிளம்பிவிட்டோம், எட்டு மாத கோவை வாழ்க்கை முடித்துக் கொண்டு.

Saturday, June 06, 2015

பார்த்த நதிகள் சட்லெஜ், பியாஸ் மற்றும் கிளைநதிகள் பார்வதி, செய்ன்ஜ். தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸ் கதவைத் திறந்ததும் கண்ணில் படுவது சுற்றியிருக்கும் மலைகளும், மலை மேல் ஆங்கங்கே தெரியும் வீடுகளும் தான். ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் செய்ன் ஜ் நதியின் இரைச்சலோசை. பசிக்கு கொஞ்சம் சாப்பாடும் ஒரு புத்தகமும் கையிலிருந்தால் குறைந்த பட்சம் நான்கு நாட்களூக்காவது வேறெதும் தேவையிருக்காது. ஜனவரி மாதங்களில் முழு மலையும் பனி போர்த்தி விடும் என்று கேட்கும் போதே கற்பனை விரிகிறது. ஆறு மாதங்களுக்கு மலை மேலிருப்பவர்கள் கீழேயே வருவதில்லையாம். இதற்கு ஒரு வீடும் இன்னொன்றும் பக்கத்தில் கூட இல்லை. வேண்டிய உணவுப் பொருட்களை சேமித்து வைத்துக் கொண்டு ஆறு மாதம்ம் வரை மேலேயே இருப்பதை நினைக்கும் போது அது நம் யூகத்திற்கப்பாலான விஷயம் என்பது நிச்சயம். ஆனாலும் இருந்து பார்க்க வேண்டுமென்றிருக்கிறது. என்ன நமக்கு சாப்பாடோட கொஞ்சம் வாசிக்கவும் எழுதவும் முடிந்தால் போதும். ஆறுமாத அஞ்ஞாத வாசம் வாழ்ந்து பார்க்கும் ஆசை வருகிறது. யார் கண்டது ஒருவேளை அதற்குப் பின்னால் திரும்பி வரவே தோணாதாயிருக்கும்!

செய்ன் ஜ் லிருந்து குல்லு மணாலிக்குப் போகும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு நீண்ட மலைக்குடைவு பாதை. இவ்வளவு நீள மலை குடைவு பாதையில் இதுவரை பயணித்ததில்லை.

வழியெல்லாம் ஷால் கடைகளும், பழங்களும். செர்ரி, ப்ளம்ஸ், குமாணி... அதிகம் தித்திப்பில்லாமல் சாப்பிட திகட்டாமலிருக்கிறது.

குல்லுவில் பார்க்க எதுவுமில்லையாம். ஒரு ஆசிரமம் இருக்கு... கொஞ்சம் வெள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று காரோட்டி சொன்னார். பார்க்க எதுவும் என்பது ' சுற்றுலாத் துறையினால் அடையாளம் காட்டப் பட்ட சைட் சீயிங் பாயிண்ட்'. முக்கியமாக இவற்றை தவிர்த்து ஒரு ஊரைப் பார்க்க நாமெல்லாம்
என்றைக்கு கற்றுக் கொள்ளப் போகிறோம்?!

மணாலியில் எங்கே பார்த்தாலும் தங்குமிடங்கள்... எழுநூறிலிருந்து எண்ணூறு வரையிருக்கலாமேன்று சொல்கிறார்கள். எல்லா வகையிலிமிருக்கிறது.

ஹடிம்பா தேவிக்கு ஒரு சிறிய கோவில். பைன் மரக்காடுகளுக்கு நடுவில் ஒரு புராதன அழகுடன். வெளியே இரண்டு மூன்று அடுக்கு போல தெரிந்தாலும் உள்ளே ஒரு பெரிய அறை. நடுவில் கூட இல்லாமல் ஒரு ஓரத்தில் ஒரு தட்டை பாறைக்குக் கீழே ஒரு ஜோடி பாதங்களும் ஒன்றிரண்டு முகமும்.

இடப்பெயர்ச்சி பலன்கள் - 7

சௌராஷ்ட்ராவையா வரட்சின்னு சொல்ற, இங்க வந்து
பாருன்னு அடுத்து கூப்பிட்டது... காந்திதாம், கட்ச். குஜராத்தின் மேற்குக்
கோடி. கண்ட்லா துறைமுகமும், Free Trade Zone ம் உப்பங்களங்களுமாய்
செல்வம் கொழித்தாலும்...எல்லாம் வெளிப்பூச்சாக மட்டுமே.

ராஜுலாவிலிருந்து போகிற வழியெல்லாம் எங்கே பார்த்தாலும் முள்காடு.
நிறைய சுருக்கங்களோடு கறுப்புப் பாவாடை, முன்புறம் மலிவான வேலைப்பாடும்
இழுத்துக் கட்ட பின்புறம் கயிறு மட்டுமேயான ரவிக்கை, அடிக்கொரு தரம்
பறந்து முதுகைக் காட்டிப் போக இழுத்து இழுத்து மூடும் சிவப்பு மேலாக்கு,
உடம்பெல்லாம் பச்சை குத்தல்களோடு பால்காரப் பெண்கள். பழுப்பேறிய வெள்ளை
உடுப்பு, பெரிய முண்டாசும் நீண்ட கோலோடும் ஆண்கள். கூட்டம் கூட்டமாய்
எருமைகள். இடையிடையே சிறு நகரங்கள், அங்கே இளிக்கும் பளபளப்பு,
தொடரும் வரட்சி. நாங்களும் இங்கே இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு
வழியில் ஒரு கான்வென்டும் சர்ச்சும்.

காந்திதாம்... நுழையும் வழியில் வரவேற்பது லாரிகளும் டாங்கர்களும் தான்.
வியாபாரம் என்பது எல்லோருக்குள்ளும் கொஞ்சம் தீவிரமாகவே இருக்கிறது.
கொழிக்கும் பணத்தை செலவழிக்க வாய்ப்புகள் இல்லாத தவிப்பு. சிந்தி
(sindhi) எண்ணிக்கை கொஞ்சம் கூட. முறமெல்லாம் வேண்டாம் முழியே
போதும் புலியை விரட்ட என்னும் சிந்தி பெண்கள். நல்ல உயரமும் பருமனும்
பெரிய குரலுமாய். எல்லோருக்கும் சிறியதாகவாவது ஒரு வருமானம் அவசியம்
என்ற மனப்பான்மை. பத்து வயசிலிருந்தே குழந்தைகள் பள்ளிக்கூடம் முடிந்ததும்
தினமும் சில மணி நேரம் அவர்களுடைய கடையில், வியாபாரம் கற்க. இது
குஜராத்தில் எல்லா இடங்களிலும் பார்க்கலாம். எதை கற்றுக் கொள்வதானாலும்
அதில் என்ன உபயோகம் என்ற கணக்கு. ஸ்கூட்டி, சன்னியெல்லாம்
சிறியவர்களுக்கு. லைசென்ஸ் எல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள். கியர் வண்டி
ஓட்டும் பெண்களை சாதாரணமாக பார்க்கலாம்.

தம்தரிக்கு அடுத்து காந்திதாமில் நிறைய 'முதல்'கள். இரண்டு பேரும்
தனித்தனி குடித்தனம் அரம்பித்தது இங்கேதான். கணவர் வேலைக்காக
முந்த்ரா(Mundra) வில் தங்க நாங்கள் பள்ளிக்கூடத்திற்காக காந்திதாமில்.
ஊருக்கு வெளியே வீடு. ஒரு ஆட்டோவுக்குக் கூட அரை கிலோமீட்டர் நடை.
ஊரில் பத்து வயசு பொடிசுகளெல்லாம் வண்டி ஓட்டுவதைப் பார்த்த தைரியத்தில்
எங்கள் வீட்டிற்கும் ஸ்கூட்டி வந்தது. வாரத்திற்கு ஒரு தரம் வீட்டுக்கு வரும்
கணவரின் அன்பான(!) வழிகாட்டுதலில் வண்டி ஓட்டத்தான் வேண்டுமா என்று
ஒவ்வொரு முறையும் நினைத்தது நிஜம். அந்த சமயத்தில் ஊருக்கு வந்த
அப்பாவின் கொஞ்சம் குறைவான அன்பில் ஒரு மாதிரி தேறியது.

கணவரும் வாரம் பூராவும் ஊரில் இல்லை. குழந்தைகளும் படிப்பு, விளையாட்டு
என்றிருந்ததில் ஏகப்பட்ட நேரம். என்ன செய்யலாம் என்று யோசித்ததில்
கம்ப்யூட்டர் தான் கவர்ச்சியாக இருந்தது. ஸ்கூட்டியும் கம்ப்யூட்டரும் ஜோடி
சேர்ந்து கொண்டது. முதல் ஒரு மாதம் இதுக்கு மேல முடியாது என்கிற அளவு
ரோட்டோரமாகத் தட்டுத்தடுமாறி, ஸ்கூட்டியும் நானும். பழகிய பிறகு ஒரு
நாள், காந்திதாம்-பூஜ் நெடுஞ்சாலையில் ஈ, காக்கா இல்லாத ஒரு மத்யான
வேளையில், காலியாய் கிடந்த சாலை தந்த தைரியத்தில் ஸ்கூட்டி மெல்ல
மெல்ல வேகம் பிடிக்க, துப்பட்டா பறக்க விரைகையில் திடீரென்று தாண்டிச்
சென்ற லாரி க்ளீனர் பையன் சைகையில் சொல்லிப் போன சபாஷ்...
இத்தனை வருடங்கள் கழித்து இப்போது நினைக்கும் போதும் சின்னதாக ஒரு
சிரிப்பு, மெல்ல தளர்த்தும் நினைவு.

கம்ப்யூட்டர் வகுப்பிலும் ஆரம்பம் சரியான சொதப்பல். புது வகுப்பு தொடங்க
முடியாமல் நாங்கள் இரண்டே பேர். தபோஜோதியும்(பெங்காலி பையன்!)
நானும். படிப்பை விட்டு பதினொரு வருடமாயிருந்தது. முதல் நாள் சொல்லிக்
கொடுத்தது அடுத்த நாள் நினைவிருக்காது. இரண்டு நாள் சொல்லிக் கொடுத்து
விட்டு ஆசிரியர் விலகி விட பொறுமையாக விளக்கியது தபோஜோதி
தான். அடுத்த ஒரு மாதத்தில் முறையாக வகுப்பு தொடங்கிய போதும் ஒன்றாகத்
தொடர்ந்தோம். அவனோடு இருந்த ஒரு வருடத்தில், தேடித்தேடி தட்ட நேரம்
எடுக்கிறேன் என்று என்னை ஒரு நாளும் கம்ப்யூட்டரை தொட விட்டதில்லை.
யோசிக்கும் வேலை மட்டும் எனக்கு. மற்றதெல்லாம் அவன் தான். சின்னச்
சின்னதாக நாங்கள் எழுதிய ப்ரோக்ராம்கள், அதை தட்டி ஒட்டி சரி செய்தது,
வீட்டில் எல்லோரும் ஓ..நோ என்று சலிக்க தொடர்ந்த தொலைபேசி
பாடங்கள்... மெல்ல கம்ப்யூட்டர் உள்ளே இழுத்துக் கொள்ள சென்டரிலே முதலாக
வந்ததெல்லாம் தனிக்கதை.

கடற்கரையெல்லாம் சிவலிங்கங்களாய் கிடக்கும் கோட்டேஷ்வர், பாகிஸ்தானை
பக்கத்தில் இருந்து பார்க்கும் நாராயண் சரோவர், முதியோர் இல்லம் போல
வயதான மாடுகளை பராமரிக்கும் கௌஷாலா, ப்ளாக் பிரிண்ட்டும்,
பாந்தினிக்கும் பெயர் பெற்ற அஞ்சார், அரைக் கரண்டி சுண்டல் ஒரு பிடி
புளியோதரையில் ஒரு கணம் ஊருக்கே கூட்டிப் போகும் கண்ட்லா பாலாஜி
கோவில், கார் ட்ரைவிங்.... வீட்டில் நடந்த திருட்டு, தொடர்ந்த
இரண்டாவது நாள்... 98 ஜீன் மாதம் கண்ட்லாவைத் தாக்கிய புயல், வெறும்
அரைமணி நேரம் உள்ளே நுழைந்த வெள்ளம், ஆயிரக்கணக்கான சாவுகள், அன்று
காலை கண்ட்லா போவதாக இருந்து தூங்கிப் போனதில் தப்பித்த கணவர்,
எப்போதும் வழியில் எதிர்படும் சர்க்கார் மருத்துவமணையில் மலை போல
குவிந்து கிடந்த பிரேதங்கள், மறுநாள் கண்ட்லாவில் எரிவாயு சேகரிக்கும்
இடத்தில் கசிவு என்ற வதந்தியில் ஊரே காலி பண்ணி ஓடியது, பதினைந்து
நாள் மின்சாரம் இல்லாமல், நல்ல தண்ணீர் இல்லாமல்...நிலையில்லாமை
முகத்தில் அறைந்தது. தெரிந்து கொள்வதற்கும் தெளிந்து கொள்வதற்கும் உள்ள
வித்தியாசம் புரிந்தது.

ஒரு மாதத்தில் எல்லாவற்றையும் சமாளித்து எழுந்தது காந்திதாம்.

இடப்பெயர்ச்சி பலன்கள் - 6

" ஆன்ட்டி, உங்க வீட்டுக்கு யார் வந்திருக்கான்னு பாருங்க", மகனுடைய நண்பன்.
யாரோ குழந்தை ஹிந்தியில் சொன்னதை தமிழில் மொழிபெயர்த்திருப்பதாக
நினைக்க வேண்டாம். அழகாக தமிழில் சொன்னதுதான்.

ராஜுலாவில் நாங்கள் வந்து இறங்கிய போது வெளியூர் ஆட்கள் மொத்தமே
பத்து பதினைந்து குடும்பங்கள் தான். தெருவில் நடந்து போனால் கண்
பார்வையில் இருந்து மறையும் வரை பார்வைகள் துளைக்கும். கோபம் வருவதற்குப்
பதில் அந்த பார்வைகள் கூச்சம் தான் தரும். சூதில்லாத மனிதர்கள்.
அவர்களுக்கு எல்லாமே வெறும் வேடிக்கை. கடைகளில் சாமானங்கள் எதுவும்
கிடைக்காது. சமையல் எண்ணை கேட்டால் நமக்காக பெருமையுடன் நீட்டும் நீண்ட
நாள் தூசி படிந்த டெட்ராபேக் தாரா கடலெண்ணை தான். மற்றபடி எல்லாம்
அளந்து ஊற்றும் எண்ணைகள் தான். சோப்பு... ரெக்ஸோனாவும் மேலும்
ஒன்றிரண்டு. ப்ரௌன் நிறத்தில் வாடையடிக்கும் ஒரு வஸ்து தான் ப்ரெட்.
பிஸ்கட் ஒரே பார்லே-ஜி.

ஆனால் அவர்களுடைய கடலைமாவு பதார்த்தங்கள் ரொம்ப விசேஷம். பெரும்பாலும்
காலை பதினொரு மணிக்கு ஒரு சாப்பாடு, ராத்திரி எட்டு மணிக்கு
இரண்டாவது சாப்பாடு. மற்ற நேரங்களில் இந்த கடலைமாவு நொறுவல்கள்
முக்கியமாய். மாஜி வீட்டு மொட்டை மாடி முற்றத்திலிருந்து பார்த்தால்
தெரியும் அந்த சின்ன கடையிலேயே ஒரு நாளைக்கு சுமார் பத்து கிலோ
கடலைமாவு செலவாகும். காலையில் ஏழுமணிக்கே எண்ணை முழுக்காடி ஒரு ராட்சச
கடலைமாவு உருண்டை தயாராக இருக்கும். எண்ணை பூசி
மொழுமொழுவென்றிருக்கும் ஒரு பலகையை சாய்வாகப் பிடித்துக் கொண்டு ஒரு
பூரிக்குத் தேவையான அளவு மாவெடுத்து மணிக்கட்டும் உள்ளங்கையும்
சேருமிடத்தால் ஒரே சீராக அழுத்தி இழுத்தால் ஒரு கடலைமாவு பட்டை
தயார். கத்தியால் கீழிருந்து வேகமான ஒரு இழுப்பில் அது பலகையை விட்டுப்
பிரிந்து, எந்த நேரமும் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணைச் சட்டியில் விழுந்து
பொரிந்து எழுந்து தயாராகி விடும். எண்ணையில் பொரித்த பச்சை மிளகாய்
அதற்கு ஜோடி. இடையிடையே ஜாரிணிக்கரண்டியை வைத்து நேரடியாக
எண்ணையில் 'சேவ்'. மேலேயிருந்து பார்க்கும் போது நமக்கு கையில்
ஆவியடிக்கிற மாதிரி இருக்கும். இன்னொரு பக்கம் ஒரு பெரிய வாணலியில்
பால் காய்ந்து காய்ந்து சுண்டி பால்கோவாவாகும். எல்லாம் வாடிக்கையாளர் கண்
முன்னாலே சமைத்து, தெருப்புழுதியுடன், உடனுக்குடனே வியாபாரம்.
ஓரளவிற்கு வசதியானவர்களுக்கு, முன்னால் சொந்த வியாபாரம் நடக்கும் கடை,
பின்னால் வீடு. கடைக்குப் பக்கத்தில் போகும் சந்து, வீட்டுக்கு போக வழி.
சந்து முடியும் இடத்தில் எதிர்பார்க்க முடியாமல் ஹாவென்று விரியும் வாசல்.
வெளியிலிருந்து பார்க்கும் போது உள்ளே இவ்வளவு பெரிய வீட்டை யூகிக்க
முடியாது. எளிமை என்றும் சொல்ல முடியாத ஒரு தினுசான வாழ்கை.
மாஜியோடு போன ஒரு வீட்டில் வயசுப் பெண்கள் மட்டும் இல்லாமல் அம்மாவும்
ஒரு அசாதாரண மினுமினுப்பில். பட்டுப் போன்ற அவர்கள் கூந்தலின் ரகசியம்
அன்றைக்கு தெரிந்தது. ஒரு பெரிய உருளிமாதிரி வாயகன்ற ஒரு
பாத்திரத்தில் மெல்லிய தீயில் எண்ணைக் காய்ச்சல். ரோஜா இதழ்களும்
விதவிதமான மூலிகைகளும் சேர்த்து. ஆள் மாற்றி ஆள் அதை கிளறி விட்டுக்
கொண்டிருந்தார்கள். விதவிதமான சமையல், சலிக்காமல் வேலை, மிஞ்சின
நேரங்களில் இது போல அலங்கார ஏற்பாடுகளும் கைவேலைகளும். ஆண்கள்
வியாபாரத்தில் கவனமாய். பெண்கள் வீடே உலகமாய்.

இந்த ஊருக்கு ஒரு ஆறு மாதத்தில் இருநூறு முன்னூறு குடும்பங்கள் வந்து இறங்கியதில்
திக்குமுக்காடியது. ராஜுலாவிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில்
சிமென்ட் தொழிற்சாலை அலுவர்களுக்கான குடியிருப்பு தயாரானதும் நாங்கள்
அங்கே குடிபெயர்ந்தோம்.

முதல் முறையாக காலனி வாழ்கை. அலுவலக ஆட்களெல்லாம்
ஒரே இடத்தில். நிறைய சௌகரியங்களும் ஏகப்பட்ட பிரச்னைகளும்.
எல்லாருடைய வீட்டு விஷயமும் எல்லாருக்கும் தெரிந்தது. கூடவே இருந்ததில்
சிலரோடு நல்ல நெருக்கமும்.

ஆனால் ராஜுலா சீக்கிரம் சுதாரிக்கத் தொடங்கி விட்டது. திடீரென்று
அடுக்குமாடிக் கட்டிடங்கள் உயர்ந்தது. கடைகளில் என்ன கேட்டாலும் கிடைத்தது.
கிடைக்காத பொருள் இரண்டே நாட்களில் அஹமதாபாத்தில் இருந்து வந்து
சேர்ந்தது. தெருவில் நடந்து போகும் போது தமிழ் பேசுபவர்களை
சாதாரணமாக பார்க்க முடிந்தது.

முதல் வரி கேள்விக்கு வருகிறேன். ஒரு களுக் சிரிப்போடு அவன் கூவிக்
கொண்டே வர "யாருடா" என்று கேட்டுக் கொண்டே வெளியில் வந்தேன்.
ஐந்தரை அடிக்கும் கூடுதல் உயரம். அநியாயத்துக்கு குண்டு. இன்னும் கொஞ்சம்
மிச்சமிருந்த கிராமக்களை.

நாந்தாங்க பாமினி என்று அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்த போது
அவருடைய உருவம் தந்த அதிர்ச்சியிருந்து இன்னும் விடுபட்டிருக்கவில்லை.
ஒருத்தரோட சிநேகமாக இருப்பதற்கு எதாவது ஒருவிதத்தில் ஒத்த ரசனை
அவசியம் என்ற என்னோட நம்பிக்கையை முற்றிலுமாக தகர்த்தது பாமினி. அது
ஒன்னும் கட்டாயமில்லை, சில நேரம் இது எதுவும் தேவையில்லை என்று
சொல்லியது அந்த நட்பு. இவ்வளவு நல்லவங்களா ஒருத்தர் இருக்க முடியுமா என்று
அடிக்கடி தோன்ற வைத்தார். பாமினிக்கு இருந்தது தன்னம்பிக்கையா
வெகுளித்தனமா தெரியாது. பணியிட விருந்துகளில் மெல்லிய குரலில்
நாசுக்கான ஆங்கிலத்தில் தொடரும் உரையாடலில், அது யாராக இருந்தாலும்
சரி, உறுத்தாமல் குறுக்கிட்டு, " நான் அதிகம் படிக்கலை, எனக்கு ஆங்கிலம்
புரியாது, ஹிந்தில பேசுங்களேன் " என்று அவர் சொன்னதும் மந்திரத்திற்கு
கட்டுப் பட்டது போல எல்லோரும் சட்டென்று ஹிந்திக்கு மாறுவது...ஆச்சரியம்.

எதாவது செய்ய வேண்டும் என்று இத்தனை வருடங்களாக சொல்லிக்
கொண்டிருந்தாலும், ஊருக்கு போகும் போது சௌகரியமாக ஒவ்வொரு முறையும்
எதாவது பண உதவி செய்வதோடு என் சமூக சேவை(!) முடிந்து விடுகிறது.
குழந்தையில்லாத அந்த தம்பதி அதற்குப் பிறகு ஒரு பெண் குழந்தையை
சொந்தமாக்கிக் கொண்டதில் இன்று அந்த முன்று பேருடைய வாழ்கையும்
சந்தோஷமாய்.

Thursday, June 04, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 5

பாலகுமாரன் கதை படிக்கும் போது கற்பனை செய்து வைத்திருந்தது. காற்றில்
குழலாட, காது ஜிமிக்கி லேசாக அசைய, ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாய்
பாடும் பெண்ணைப் பற்றி. ஒரு பார்ட்டியில் அந்த கற்பனைக்கு உருவம் தந்தது
பூர்வர்ஷா. பெங்கால் தங்கம்?!! நிஜமாகவே எலுமிச்சை நிறம், அளவான
உயரம், அதற்கேற்ற உடம்பு...இதெல்லாம் கண்களைத் திறந்தால் தெரிவது.
மூடிக் கொண்டால் அந்தக் குரல் ஒரு நதி. துள்ளலும் துடிப்புமாய்.

ஏற்கனவே லதாவின் பழைய பாடல்களில் கிறங்கிய அனுபவம் இருந்தாலும் கண்
முன்னே நின்று ஒருவர் பாட அதில் நான் உருகி வழிந்த மாதிரி உணர்ந்தது
அப்போது தான். அன்று அவர் பாடியது எனக்கு ரொம்ம்ம்ப பிடித்த லதாவின்
மீரா பஜன். அதை பூர்வர்ஷா குரலில் கேட்டது நிச்சயம் வேற அனுபவமா
இருந்தது. தனிமையாக உணரும் சில நேரங்களில் எதிலாவது என்னை மறக்க
செய்ய வைக்கும் வழி என்ன என்ற ஒரு தேடல் இருந்தது. அந்தக் குரலும் அதன்
குழைவும்.....இதுதானா அது என்றிருந்தது. பாடி முடித்த அவரிடம் இருந்து
கவனத்தை மாற்ற சிரமமாக இருந்தது. இனி எப்போது மறுபடியும் என்ற
கேள்வியும்.

சந்தர்பங்கள் அடிக்கடி வந்தது. காலனியில் எதாவது விசேஷங்கள் இருந்து
கொண்டே இருந்தது. எல்லாவற்றிலும் பூர்வர்ஷாவின் பாட்டும் தவறாமல். அவர்
பாட ஆரம்பித்தால் போதும். சுற்றி இருக்கும் எல்லாரையும் மறந்து, எல்லா
சப்தமும் மறைந்து அந்தக் குரலை மட்டும் உணர முடிந்தது. ஆனால் 
எத்தனை கேட்டாலும் ஆசை தீராமல் இருந்தது.

குழந்தைகளுக்காக பாட்டு வகுப்பு தொடங்கிய போது எனக்கும் சொல்லிக்
கொடுக்க முடியுமான்னு கேட்க அவர் கண்ணில் தெரிந்ததற்க்கு அர்த்தம்
என்னவாயிருக்கும்? ஆனால் சரின்னு தான் சொன்னார். அதற்கு முன்னால் பாடினது
என்று சொன்னால் அது 'மிலே சுர் மேரா துமாரா' தான். மகளுக்கு இரண்டு
வயதாக இருக்கும் போது வெளிவந்திருந்தது. அந்தப் பாட்டு போட்டாதான்
சாப்பிடுவேன்னு அடம் பிடிப்பாள். டிவியில் அது எப்போது வரும் என்றே
தெரியாது. எப்போதாவது வரும் போது என்ன குடுத்தாலும் மடமடன்னு இறங்கும்.
பிடிக்காததா இருந்தா முதல் வாய் சாப்பிடும் போது இதான்னு ஒரு கேள்வி
கண்ணிலே வரும். அப்புறம், சரி சரி என்னை தொந்தரவு செய்யாதேன்னு ஒரு
பார்வை அறிவிப்பு. சத்தமில்லாமல் சாப்பிட்டாகிவிடும். அவளுக்காக அந்த
பாட்டு மனப்பாடம் ஆகியது. ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று தரம், சுமார் ஆறு
மாதம், அவளுக்காக மட்டும்.... முகத்திலிருந்து கண்ணெடுக்காமல் கேட்பாள்.
எதாவது ஒரு வரி விட்டு விட்டால் இல்லை தப்புன்னு தலை ஆடும்(வாயில் தான்
சாப்பாடு இருக்குமே!)... அவ்வளவு தான் வாய்விட்டு பாடிய அனுபவம்.

பாட்டு வகுப்பில் முதல் நாள் குரலே வரவில்லை. அப்புறம் கூட்டத்தோட
பாடினாலும் தனியா பாடுன்னு சொல்லும் போது படபடன்னு...வேர்த்துப் போய்!
முடியாதோ என்று தயங்கின போதெல்லாம் பூர்வர்ஷாவின் குரல் மறுபடியும்
மறுபடியும் இழுத்தது. ஸரிகம வில் லேசான அறிமுகத்தோடு மூன்றாவது மாதம்
ஒரு பஜன் சொல்லிக் கொடுத்தார்.
'துமக சலத ராம சந்த்ர'. பாடப் பாட கொஞ்சம் கொஞ்சமாக தயக்கம்
விலகி, கண்ணை மூடி அனுபவிக்க முடிந்தது. (இதை எழுதும் போது அந்த
டைரியை தேடி எடுத்து பார்த்த போது அந்தப் பக்கம் மட்டும் மஞ்சளடித்து
இருந்தது. சமைக்கும் போது கூட அந்த புத்தகத்தை வைத்து பாடிக்கொண்டே
சமைத்ததின் மிச்சங்கள்). பேஹாக் ராகத்தில் சின்னதாக ஒரு அறிமுகத்தோடு
தொடங்கிய அடுத்த பாடம் அந்த புத்தகத்தில் பாதியில் நிற்கிறது.

எங்களுக்கு மாற்றல் வந்து விட்டது!

மூன்று மாத அந்த அனுபவம், ரசனையை நிச்சயம் மாற்றியது. குஜராத்தில்
பெரியவர்கள் சொல்வது..."ஷ்ருத் கி(Ghee) ஹஸம் ந கர் சக்தே யே
பீடி(peedi)' (சுத்தமான நெய்யை ஜீரணிக்க முடியாத தலைமுறை)...அது
மாதிரி சுத்தமான சங்கீதம்... குறிப்பா கர்நாடக சங்கீதம் புரிவதும்
இல்லை, ஜீரணமாவதும் இல்லை.

ஆனாலும் குறையொன்றும் இல்லை.

Wednesday, June 03, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 4

வாஷி - யில் இருந்து கிளம்பி சூரத், அங்க்லேஷ்வர், ரத்தினகிரி....நாலு
வருஷத்தில் மூன்று ஊர் சுற்றி, ராஜுலா (Rajula, Sourashtra,
Gujrat) வந்து சேர்ந்தோம். நடுவில் மகன் வரவு.

ராஜுலா...அடுத்த பட்டிக்காடு. அதுவும் வரண்ட பட்டிக்காடு. ரயில்
வசதியெல்லாம் கிடையாது. அஹமதாபாத்தில் இருந்து பஸ். எட்டு மணி நேரம்.
வழியெல்லாம் ஒரே வரட்சி. அங்கங்கே வரும் ஒரு சில ஊர்கள்...அதுவும்
கொஞ்சம் கூட பசுமை இல்லாமல், ப்ரௌன் கலர் தூக்கலா இருக்கின்ற ஓவியம்
மாதிரி. ஆண்கள் கட்டியிருக்கும் வேட்டி கூட காவியேறின நிறத்தில்.
வாங்கும் போதே இந்த நிறத்தில் தான் இருந்திருக்குமோ என்று தோன்றும்.
பேருக்குக் கூட ஒரு வெள்ளை வேட்டி பார்க்கக் கிடைக்காது. முக்காடு போட்ட
பெண்கள்...புழுதி ஏறிய குழந்தைகள்...வழியெல்லாம் இதையே பார்த்துக்
கொண்டு போகும் போது பயமாக இருந்தது.

ராஜுலாவும் வழியில் பார்த்த ஊர்களைப் போலத்தான். அவசரமாக துடைத்து
வைத்தது போல கொஞ்சம் பளிச்சென்று இருந்தது. சந்துகளில் இரண்டு பக்கமும்
சாக்கடை ஓட, எங்கும் பன்றிகள் சாம்ராஜ்யம். ஏதோ நினைத்துக் கொண்டு
ஒன்று சத்தம் போட்டுக் கொண்டு ஓட, மற்றதெல்லாம் பின்னால் துரத்த...நடு
ரோட்டில் அருவருப்பில் நடுங்கிக் கொண்டு நான் நிற்க...எல்லோரும் அவரவர்
வேலையைப் பார்த்துக் கொண்டு. கொஞ்ச நாளில் எனக்கும் பழகி விட்டது!

ஊரும் ஜனங்களும் தான் அவ்வளவு அழுக்கு. வங்கியில் ஒரு நாள் முண்டாசும்
வெற்றிலை வாயுமாய் கூட்டம் நெரிக்க, நான் ஹேண்ட் பேகைத் திறந்து சில
நூறுகளை எண்ணிக் கொண்டிருக்க, பக்கத்திலிருந்தவர் அழுக்குப் பைக்குள்ளிருந்து
நூறு ரூபாய் கட்டுகளை எடுத்துக் கொடுத்து கொண்டிருந்தார்! நிச்சயம் அது நான்
எதிர்பார்க்காதது. நான்கு எருமைகளை நாற்பது எருமைகளாக மாற்ற மட்டுமே
தெரிந்த ஜனங்கள். அவர்களைப் பார்க்கும் போது எனக்கு வந்த பரிதாப
உணர்ச்சி, என்னைப் பார்க்கும் போது அவருக்கும் வந்திருக்கலாம்!

ராஜுலா வீடு இரண்டாம் மாடியில். முதல் மாடியில் வைர கற்கள் பாலிஷ்
செய்யும் தொழிற்சாலை. வழியெல்லாம் வெற்றிலை துப்பி, ஒரே நாற்றமாய்.
அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் இரண்டாம் மாடி வீடு நல்ல வசதியாய்,
காற்றோட்டமாய். வரவேற்பறை ஜன்னலில் இருந்து பார்த்தால் வீட்டுக்காரர்
போர்ஷனுக்கு முன்னால் இருக்கும் பெரிய மொட்டை மாடி முற்றம். நிலா காயும்
நேரம் அந்த முற்றம் ரொம்ப அழகு. இது தான் வீட்டுக்கார அம்மா என்று கணவர்
அறிமுகப்படுத்தியவருக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கும். சிரிக்க சிரிக்க
வாங்கன்னு சொன்னவரின் கண்கள் சிரித்த மாதிரி தோன்றவில்லை.
வயதானவராக இருந்ததால் மாஜி என்று கூப்பிட ஆரம்பித்தோம்.

எங்கள் வீடுகளுக்கு நடுவில் ஒரு இரும்பு கேட். அதைத் தாண்டினால் தான் அந்த
முற்றத்திற்கு போகலாம். முதல் இரண்டு நாட்களுக்கு அதை திறக்காமல் அந்தப்
பக்கம் இருந்து ஒன்றிரண்டு வார்த்தை பேசினார். அப்புறம் என் மகன்
விளையாடட்டும் என்று அந்த கேட்டைத் திறந்தார். கொஞ்சம் மிடுக்காகவே
எப்போதும் இருப்பதாக தோன்றியதால் பேச முதலில் தயக்கமாக இருந்தது.
இரண்டு மாதம் பழக்கத்தில், பம்பாயில் மகன், மருமகள், பேரக் குழந்தைகள்
இருக்க, கணவர் வியாபரத்தை பார்த்துக் கொண்டிருக்க அவர் இங்கே தனியாக
இருப்பதாக தெரிந்தது. மருமகளோடான மனக்கசப்பில் உடல் நலமில்லாமல்
போய் கொஞ்ச நாளாகத்தான் இங்கே இருப்பதும். இது துண்டு துண்டாக அவர்
பேசியதிலிருந்து யூகித்தது. ஆனால், 'எனக்கு யாருடைய பரிதாபமும்
வேண்டாம்' என்ற உறுதியோடு இருப்பதை உணர்த்தவும் தவறியதில்லை.

அப்படி இருந்ததாலோ என்னவோ அவரோடு நெருங்க வேண்டும் போல இருந்தது.
அவராக இளகட்டும் என்று காத்திருந்ததில் இன்னும் இரண்டு மாதம் போனது.
அவருடைய கணவரும் பம்பாயில் இருந்து வந்து விட கொஞ்சம் கலகலப்பாகி
விட்டார். ஒரு தரம் ஏதோ பேசும் போது அவருடைய கணவரை 'துமாரி
பிதாஜி' (உன்னுடைய அப்பா) என்று சொல்லி அவ்வளவு நாள் போட்டு
வைத்திருந்த கோட்டையை அவரே உடைத்தார். நம்ப முடியாத ஆச்சர்யத்தில்
நிமிர்ந்து பார்த்த என் கண்களை அவர் பார்க்கவில்லை. மாஜியின் மானசீக
மகள்!

அதற்குப் பிறகு எல்லாம் அவருடைய விருப்பம் தான். அவருடைய வீட்டுக்கு யார்
வந்தாலும் கூடவே கூட்டி வைத்துப் பேசுவது, எங்கே போனாலும் என்னையும் கூட்டிக்
கொண்டு போவது...சில நேரம் விருப்பம் இல்லாத போதும் ஏனோ மறுக்க
மனம் வந்ததில்லை.

மாஜிக்கு உடல்நலம் சரியில்லாமல் நடக்கவே முடியாமல், மனதளவிலும்
பாதிக்கப் பட்டிருந்தபோது (நாங்கள் அங்கே வருவதற்கு முன்) சரி செய்தது
அங்கே இருந்த ஒரு நாட்டு வைத்தியர். காவி தரிக்காத சந்நியாசி.
அவர்களுடைய குடும்ப நண்பர். தினமும் வருவார். சில நேரங்களில் என்னோடும்
பேசிக் கொண்டிருப்பார். அவர் சந்தித்த பெரிய பெரிய சந்நியாசிகளைப்
பற்றி, அவருடைய தீர்த்த யாத்திரைகளைப் பற்றி. இயல்பானவர்.
எளிமையானவர்.

ஒரு நாள் மாஜி 'கிளம்பு, வெளியிலே போயிட்டு வரலாம்' என்றார்.
வழக்கமாக அந்த நேரத்தில் அவர் கோவிலுக்குப் போவது வழக்கம். அதனால்
அங்கே தானென்று நானும் மகனும் கிளம்பினோம். வழக்கமான பாதையை விட்டு
போகும் போது கேட்டதற்கு வைத்தியருக்கு உடம்பு சரியில்லை என்று அவருடைய
வீட்டுக்கு போவதாக சொன்னார்.

வைத்தியர் வீடு...எங்கேயோ மேட்டில் ஏறி இறங்கி கொஞ்சம் தூரத்தில்.
அங்கங்கே இடிந்து போய் ரொம்ப பழைய வீடு. ஆனால் சுத்தமாயிருந்தது.
வாசலில் கயிற்றுக் கட்டிலில் வைத்தியர். எங்களைப் பார்த்ததில் அவருடைய
சந்தோஷம் தெரிந்தது. என்னோடு வைத்தியர் பேசிக் கொண்டிருக்க, மாஜி
சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார். இடையில் எட்டிப் பார்த்த
போது ஒரு ஸ்டவ், நாலே பாத்திரம் இருந்த அந்த அசௌகரியத்திலும் ஒரு
சந்தோஷத்தோடு வைத்தியருக்காக உப்புமா செய்து கொண்டிருந்தார்.
சாமானெல்லாம் நாங்கள் வழியில் வாங்கிக் கொண்டு போயிருந்தோமா,
ஏற்கனவே அங்கே இருந்ததா...நினைவில்லை. இடையிடையே  ஏதாவது
வேண்டுமா என்று வைத்தியர் வாசலில் இருந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அரைமணி நேரத்தில் சக்கரையும் போட்ட இனிப்பு உப்புமா தயார். வாசல்
மணலில் என் மகன் விளையாடி கொண்டிருக்க, படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு
நான் வைத்தியரோடு பேசிக் கொண்டிருக்க, ஒரு நிறைவான உணர்வோடு மாஜி
தட்டை நீட்டியது அழகான ஒரு நேச வெளிப்பாடு. ஒரு கவிதை போல. நான்
மட்டுமே ரசிக்க யாரோ தீட்டிய சித்திரம்.


Tuesday, June 02, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 3

உரண் - க்கு பஸ் ஏற தாதரில் காத்துக் கிடக்கும் போது அரைமணிக்கொருதரம்
வாஷிக்கு பஸ் வரும். அப்போதெல்லாம் நம்ம வீடு அங்கே இருக்கக் கூடாதா
என்று இருக்கும். எங்கள் அடுத்த மாற்றல் அதே வாஷிக்கு. 88, 89 ல் அது
இத்தனை ஜிலுஜிலுன்னு இருக்காது. ரொம்ப அமைதியாய், வசதியாய்.

திருமணத்திற்குப் பின் தமிழோடு தொடர்பே இல்லாமல் இருந்து முதல் முதலாக
வாரம் தவறாமல் தமிழ் புத்தகம் கிடைத்தது. வெளியே போகும் போது தமிழ்
பேசிக் கொண்டே போகும் மனிதர்களைப் பார்க்க முடிந்தது. சில நேரம்
நடுவழியில் திரும்பி பார்த்துக் கொண்டு அப்படியே நின்று கணவரிடம்
வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு. போய் சேர்ந்த கொஞ்ச நாளில் ஒரு
தமிழ் சங்கம் கூட கிடைத்தது. வீட்டிலிருந்து பத்து நிமிஷ நடையில் தமிழ்
சங்கக் கட்டிடம்(ஒற்றை அறை!). ஒரு அலமாரி நிறைய புத்தகங்கள்.
பெரும்பாலும் வாஸந்தி, இந்துமதியா படித்த நினைவு. இரண்டு நாட்களுக்கு ஒரு
புத்தகம் வீதம். அப்போதிருந்த புத்தகங்களில் நான் படிக்க கூடியதெல்லாம்
ஓரளவுக்கு படித்து முடித்து விட்டிருந்தேன்.

ஹிந்தி இப்போது ஓரளவுக்கு பேச முடிந்தாலும் யார் வீட்டிலும் போய் அரட்டை
அடிக்கப் பிடிக்காமல் இருந்தது. அப்போது தான் நேஹாவோடு  பழக்கம்.
நேஹா.... அப்பா மஸ்கட்டில் இருக்க, அம்மா, அக்கா, தம்பியோடு எங்கள்
பக்கத்து வீட்டில். பனிரெண்டு பதிமூன்று வயதுக்கு நல்ல உயரம். முகம் மட்டும்
குழந்தை மாதிரி கொழுகொழுன்னு. தினம் சாயந்திரம் குறைந்தது ஒரு மணி
நேரம் எங்கள் வீட்டில். எங்கேயோ ஆரம்பித்து எங்கெங்கேயோ போகும்
பேச்சு. அவள் உரையாடல் எப்போதும் இயல்பாக ஆங்கிலத்தில் மட்டும்.
பத்தாவது வரை தமிழில் படித்து ஆங்கிலத்திற்கு தாவியதில் படிப்பதும்
எழுதுவது மோசமில்லை என்றாலும் எனக்கு பேசும் சந்தர்ப்பம் இருந்ததில்லை
(அந்த ஆங்கில அறிவுக்கு பயந்து தான் தம்தரியில் ஒரு காலனியே என்னை
ஒதுக்கி வைத்திருந்தது!). வற்புறுத்துவதே தெரியாமல் மெல்ல மெல்ல அந்தப்
பெண் என்னை ஆங்கிலத்தில் பேச வைத்தது.

என்னால் முடியாதோ என்று தயங்கிய என்னை வற்புறுத்தி அவளுக்கும் அவளுடைய
தம்பிக்கும் டியூஷன் டீச்சர் ஆக்கியதும் நேஹா. இன்னும் இரண்டு குழந்தைகள்
சேர்ந்து கொள்ள, என் ஆங்கிலம் தெளிவாக ஆரம்பித்தது. முதல் முதலாக
சம்பாதிக்கிறேன் என்ற சந்தோஷம். தமிழ் சங்கமும் புதிய புத்தகங்கள்
வாங்கி வந்து இறக்கியது. ஆஹா...வாழ்கை சொர்க்கம் என்று நினைத்த
போது, மறுபடியும் மாற்றல். இந்த முறை ஊர் மட்டுமல்ல, கம்பெனியும் கூட!

புறப்படும் நாள் வீட்டிலிருந்து கிளம்பும் நேரம். கடைசி நிமிஷம் வரை
வேலை. நேஹாவிடம் சொல்லிக் கொள்ள போன போது, குளிக்கப்
போயிருந்தாள். கணவர் நேரமாகிறது என்று அவசரப் படுத்த, எப்படியோ பத்து
நிமிஷம் ஓட்டியும் அவள் வெளியே வரவேயில்லை. மனமே இல்லாமல் கீழே
வந்து ஆட்டோ ஏறி, கிளம்பும் நேரம் நேஹா ஓடி வந்தாள். அவளுடைய
வழக்கமான நீல நிற சட்டையில், கண்கள் சிவந்து, ஆட்டோ கம்பியை
பிடித்துக் கொண்டு, ஓடி வந்ததில் மூச்சு வாங்கிக் கொண்டு வழியனுப்பின
நேஹா...

இடப்பெயர்ச்சி பலன்கள் - 2

உரண் (Uran) - எங்களுடைய இரண்டாவது ஊர். இதோ இதோ என்று இழுத்தடித்து
ஏறக்குறைய பத்து மாதம் கழித்து வந்த மாற்றலில் வந்து சேர்ந்த பம்பாயின்
புறநகர் பகுதி. தாதரில் இருந்து பஸ் ஏறிப் போய்க் கொண்டேஏஏஏ இருந்தால்
மூன்று மணி நேரத்தில் உரண். ஆனால் ஏனோ அது எப்போதும் ஒரு முடிவில்லாத
நீண்ட பயணமாகவே  தோன்றும். வி.டிக்குப் பக்கத்தில் இருந்து ஃபெரியில்
நாற்பதே நிமிடம். இவ்வளவு பக்கத்தில் இருந்தும் பாம்பேயின்
ஆர்ப்பாட்டங்களோ அமர்க்களமோ தீண்டாமல் அமைதியாய் இருக்கும். ஒரு
ஒற்றைத்தெரு கடைவீதி தவிர வேற எதுவும் குறிப்பிட்டு சொல்ல இருந்தது
போல் நினைவில்லை.

பாபு சேட் வாடி(wadi) பங்களா - எங்களுடைய வீடு. வாடி என்ற பேருக்கு
ஏற்ற மாதிரி எப்போதோ இருந்த தோட்டத்தின் மிச்சமாக ஒன்றிரண்டு
மரங்கள். மற்ற இடமெல்லாம் சருகுகாய் நிறைந்திருக்கும். வாசல் கேட்டிலிருந்து
பார்க்கும் போது ஒரு காலத்தில் அழகாக இருந்திருக்கக் கூடிய ஒரு பங்களாவின்
சிதைந்த தோற்றம். முதல் முதலாக பார்த்த போது இங்கேயா இருக்கப்
போறோம் என்று யோசனையாக இருந்தது. ஏற்கனவே ரொம்ப நாள்
பிரிந்திருந்ததில் எங்கே இருக்கச் சொன்னாலும் தயார் என்ற மனநிலையில்
இருந்ததால் வாயையே திறக்கவில்லை.

அந்த பங்களாவில்(!) எங்களையும் சேர்த்து ஐந்து குடித்தனம். எங்களுடைய வீடு
முன்னாலிருந்தது. எங்களுக்கும் பக்கத்துப் போர்ஷனுக்கும் சேர்த்து ஒரு பொது
வராண்டா. நடுவில் கம்பெனியிலிருந்து வந்த ஒரு தகர தடுப்பு. அடுத்து ஒரு
பெரிய அறை...வரவேற்பு அறையாகவும் படுக்கையறையாகவும் ஒரு
தார்பாலினால் பிரிந்திருந்தது. அடுத்து நீண்ட ஒரு அறை...இதுவும் ஒரு
தார்பாலின் உபயத்தில் சமையலறையாகவும் குளிக்கும் அறையாகவும். எல்லாம்
கணவர் ஏற்பாடு. சமையலறையில் ஒரு வட்ட மேசை...ஒரு கால் ஆடிக்கொண்டு.
அது தான் சமையல் மேடை. கோணலாய் L க்ளாம்ப் அடித்து ஒரு
பலகை...சாமானெல்லாம் வைக்க. பின்புறம் ஒரு பொது கழிப்பிடம். அதைப்
பற்றிப் பேசாமல் இருப்பது உத்தமம்.

சாமானெல்லாம் கல்கத்தாவுக்கு மாற்றலை எதிர்பார்த்து அங்கே போய்
விட்டிருக்க நாங்கள் பம்பாயில். ஒரு பம்ப் ஸ்டவ், ஐந்தாறு அலுமினியப்
பாத்திரம், ரெண்டு தட்டு, ரெண்டு டம்ளர், ஒரு சப்பாத்திக் கட்டை,
கோல்... "இதில் கொஞ்ச நாள் ஒட்டு. சாமான் சீக்கிரம் வந்துடும்"
என்றார். ஆறுமாதக் குழந்தையோடு அப்படியே எப்படி ஓடியது.... இப்போது
நினைத்தால் ஆச்சரியம்!

அந்த வீட்டில் பின்பகுதியில் இரண்டு குடும்பம். அண்ணன் தம்பிகள். இரண்டு
வீட்டிலும் இரண்டிரண்டு பெண்கள். சாய்மா, ஸக்கியா, ஷபானா, ஷகுப்தா.
இதில் ஸக்கியாவுக்கு பேசவும் கேட்கவும் முடியாது. நாலு பேரில் எதாவது
இரண்டு பேர் எப்பவும் எங்கள் வீட்டில் இருப்பார்கள். அதிகம் படிக்காத, வெளி
உலகத் தொடர்பு இல்லாத பெண்கள். கொஞ்சம் அளவுக்கு அதிகமான வெட்கம்,
சொல்ல முடியாத வெகுளித்தனம். எப்போதாவது அந்த ஒற்றைத் தெரு
கடைவீதிக்கு போக காலையிலிருந்தே பரபரப்பாக இருக்கும் பெண்கள். உருது
வாசம் வீசும் அவர்கள் ஹிந்தி. வெறும் புரிந்து கொள்ளும் அளவில் இருந்த
என்னை ஹிந்தி பேச வைத்த புண்ணியம் அவர்களுக்குத்தான். மூன்று மாதம் கழித்து
சாமானெல்லாம் வந்து சேர்ந்தது. புதிதாக கட்டிய ·ப்ளாட் இருக்கு
போயிடலாம் என்று கணவர் சொன்ன போது, ஏனோ போகத் தோணவில்லை.

பாஷை கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட ஆரம்பித்தது. அந்த சமயத்தில் ராஜ்
கபூர் இறந்து போய் விட அவர் நினைவாக தூர்தர்ஷன் போட்ட எல்லாப் படமும்
அர்த்தம் புரிந்து பார்க்க முடிந்தது. அதற்கப்புறம் தேடித் தேடி அவருடைய மற்ற
படங்களையும் பார்க்க வைத்தது. யார் என்ன என்று தெரியாமலே குருதத்தின் Mr
& Mrs 55 பார்த்து ஆச்சரியப்பட்டதும் அப்போதுதான். சமீபத்தில் The
Telegraph ல் ஒரு முழுபக்கம் வந்த அவருடைய நினைவுநாளை ஒட்டிய
கட்டுரையை படித்த போது இந்த மனிதர் ஏன் இப்படி அநியாயமாக செத்து
போனார் என்று இருந்தது. படத்தில் மதுபாலாவோடு ஒரு பாடல் காட்சி மட்டும்
மங்கலாக நினைவில்.

பதினொராவது மாதம் மாற்றல்! மறுபடியும் மூட்டை கட்டல்!

மூன்று நான்கு வருடம் கழித்து "humrahi" என்ற தொலைக்காட்சித் தொடரில்
எங்கள் பாபு சேட் வாடி பங்களா! குளித்து, மேக்கப் பண்ணிக் கொண்ட
பெண்ணாட்டம் பளபளவென்று பார்த்த போது ஏனோ நாங்கள் இருந்த போது இருந்த
புராதன அழகு இல்லாதது போல் இருந்தது.

Monday, June 01, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 1

2004 ல் மரத்தடிக்காக மரத்தடி சின்னக் கண்ணன் எழுதச் சொல்லி எழுதியது. என்னுடைய பதினெட்டு வருஷங்களை கேப்ஸ்யூலில் அடைத்து வழக்கம் போல சுருக்கமாக எழுதிய சில குறிப்புகள். எதோ தேட கிடைத்ததை இங்கே சேமிக்கிறேன். முன்பு மரத்தடியில் எழுதியதெல்லாம் ஒரு இடத்தில் எழுதியவர் பேர் போட்டு தொகுத்து வைத்திருந்ததை வெகு சுலபமாக ப்ளாகில் லிங்க் கொடுத்திருந்ததை இப்போது இப்படி எடுத்துப் போட்டு சேகரிக்க வேண்டியிருக்கிறது. பதினோரு வருஷத்துக்கு முந்திய... அது ஒரு கனாக்கால நினைவுகள்!

 இடப்பெயர்ச்சி பலன்கள் - 1


தெரியலைன்னா கேட்டுட்டாவது வாங்கி இருக்கலாமல்ல?"

எட்டாவதோ ஒன்பதாவதாவோ கேட்கிற ஒரே கேள்விக்கு அடுத்து என்ன பதில்
சொல்ல என்று தெரியவில்லை. அழுதுடுவேனோன்னு பயந்து "சரி...சரி
எப்படியாவது போயிடலாம்" என்று கணவர் பதில் சொல்ல 86 மே மாதம்
தொடங்கிய பயணம்.

விஷயம் வேற ஒன்றும் இல்லை. துர்க்-க்கு(Durg) டிக்கெட் வாங்கி வைக்கச்
சொல்ல, அப்பா எந்த ட்ரெயின் போகும் என்று புக்கிங் க்ளார்க்கைக் கேட்டு
பொக்கேரோ ஸ்டீல் சிட்டி எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் வாங்கியிருந்தார். அந்த
ட்ரெயின் துர்க்குக்கே போகாதாம். டிக்கெட் வாங்க சொன்னவர் ட்ரெயின்
விவரமும் சொல்லியிருக்கலாம்! புதுப்பொண்ணுக்கு அதெல்லாம் கேட்கத்
தெரியாது. பயம் வேற. விசாகப்பட்டிணத்தில் இறங்கி வேற ட்ரெயின்
மாற்றி ஒரு முன்பதிவில்லாத பெட்டியில் பயணத்தைத் தொடர்ந்து, ரெண்டு நாள்
கழித்து ராய்ப்பூர் போய் சேர்ந்தோம்.

ராய்ப்பூரிலிருந்து இரண்டரை மணி நேர கார் பயணம் தம்தரிக்கு(Dhamtari,
MP). தம்தரி....ரொம்ப சின்னதா, கிராமம் மாதிரி அழகாயும்
இல்லாமல் நகரம் மாதிரி வசதிகளோடும் இல்லாமல். ஊருக்கு வெளியே
குஜராத்திகள் சேர்ந்து கட்டியிருந்த ஒரு காலனியில் வீடு. அந்த ஊருக்கு அது
ரொம்ப ரொம்ப வசதியான வீடு. எல்லா வீட்டின் வராந்தாவிலும் தவறாமல்
ஒரு ஊஞ்சல். சதா அசைந்து கொண்டிருக்கும் அந்த ஊஞ்சல்களில் ஓவ்வொரு நேரம்
ஒவ்வொரு வயதுக் கூட்டம். பள்ளிக்கூடம் போகும் வரை குழந்தைகள், பிறகு
வீட்டுப் பெரியவர், பதினோரு மணிக்கு மேல் வீட்டுப் பெரியம்மா,
மத்யானம் அதற்கும் கொஞ்சம் ஓய்வு. மாலையில் வீட்டு மருமகள்கள், ராத்திரி
நேரம் வியாபாரம் முடித்து வந்த ஆண்கள் கூட்டம்.

மாலை ஐந்து மணிக்கே ராத்திரி சமையலை முடித்து விட்டு பெண்கள் எல்லாரும்
வாசலுக்கு வந்தாகிவிடும். கூட்டம் கூட்டமாய் அரட்டை, வம்பு..எல்லாம்.
தூர்தர்ஷன் புண்ணியத்தில் பானி, ஆவ்....இப்படி ஏதோ நாலு வார்த்தை
மட்டுமே தெரியும். அதனால் யாரைப் பார்த்தாலும் (வாய் வலிக்க!) ஒரு
புன்னகை மட்டும்.

என் மனைவிக்கு ஹிந்தி தெரியாது. எதாவது பேசனும்னா இங்கிலீஷ்ல
கேட்டாத்தான் புரியும் என்று பக்கத்து வீட்டு அம்மாவிடம் கணவர் சொல்லி
வைத்திருந்திருக்கிறார். அதனாலேயோ என்னவோ யாரும் என்னோட பேசவே
வரமாட்டார்கள்(இதெல்லாம் அப்புறம் தான் தெரிந்தது). எப்போதும் தனியாக
உட்கார்ந்திருக்கும் என்னிடம் ஒரு வயதான மாஜி மட்டும் நேரம் கிடைக்கும்
போது வந்து உட்கார்ந்திருப்பார்கள். எதோ நினைத்துக் கொண்டு மெல்லிய
குரலில் பேசிக் கொண்டிருப்பார். எதுவும் புரியாமல் அவரையே பார்த்துக்
கொண்டு நான்.

அங்கே போகும் வரை ஒரு தனியார் கம்பெனி சிவில் எஞ்சினியரின் வாழ்கை
எப்படி, வேலை நேரம் எவ்வளவு, எத்தனை நாளுக்கு ஒரு தரம் மூட்டை கட்ட
வேண்டும்...எதுவும் தெரியாது. ஏன் யோசிக்கவும் இல்லை??! கணவர் வேலைக்கு
எப்போ போவார் என்று மட்டும் தான் தெரியும். திரும்பி வருவதைப் பற்றி
எந்தத் தகவலும் இருக்காது. இலட்சக்கணக்கான தகவல்களோடு ஒரு ரீடர்ஸ்
டைஜெஸ்ட் "book of facts", ஒரு ரெபிடெக்ஸ் ஹிந்தி புக்...
இவற்றோடு ஓடிய நாட்கள். ஊரின் ஒரே பொழுது போக்கு ஒற்றை சினிமா
தியேட்டர், புரியாத ஹிந்திப் படங்கள். நீண்ட தனிமையான நாட்களின்
வெறுமையையெல்லாம் சைக்கிள் ரிக்ஷா குலுங்கலில் இடித்துக் கொண்டே போய்
சினிமா பார்த்த சந்தோஷங்கள் இட்டு நிரப்பியது.

பாவ் பாஜி என்ற பெயரை(யே) முதல் முதலாகக் கேட்டதும் அங்கே தான்.
மார்க்கெட் போகும் போதெல்லாம் மூக்கைத் துளைக்கும் வாசனை. ஒரு நாள்
தயங்கித் தயங்கி கேட்க...அதிசயமாய் ரோட்டோரக் கடைக்கு கணவர் ஓக்கே
சொல்ல...சுடச்சுட பாஜி தட்டில் வந்தது. பாவ் தவாவில் வறுபடறதுக்குள்
நாங்கள் வெறும் பாஜியை சாப்பிட ஆரம்பித்து விட்டோம். கடைக்காரர்
அவசர அவசரமாக சுட்டு நீட்டினதும் தான் தெரிந்தது, அது கூட சேர்த்து
சாப்பிடணும் என்று!

ஆறு மாதங்கள் ஓடி விட்டது. ஐந்து மாத கர்ப்பம். டாக்டர் வசதிகள்
சரியில்லை என்று கூட்டிட்டுப் போக அம்மா வந்தாயிற்று. கணவருக்கும் வேலை
முடியும் கட்டத்தில். ஊருக்குக் கிளம்புகிற நாள் காலை. அம்மா வழியில்
சாப்பிட சாப்பாடு கட்டிக் கொண்டிருந்தார். நான் மற்றதெல்லாம் எடுத்து
வைத்துக் கொண்டிருக்க, கணவர் இது நாள் வரை உபயோகித்துக் கொண்டிருந்த
கட்டில்களைப் பிரித்து ஒன்றை வேறு அறையில் போட்டுக் கொண்டிருந்தார்.
(நான் வருவதற்கு முன்பு அது கம்பெனியின் விருந்தினர் தங்கும் இடமாயிருந்தது.
அந்த அறையில் அவர் தனியாக தங்கியிருந்தார்).

"உன் வீட்டுக்காரர் இதெல்லாம் நாம போனப்பறம் செஞ்சுக்கக் கூடாதா? இன்னும்
நீ கிளம்பவே இல்லை, அதுக்குள்ள ஏன் உன் கட்டிலை வெளியில போடறார்?"
இது அம்மா.

நான் எதுவும் பேசவில்லை. சோகம் சொல்ல ஒவ்வொருத்தருக்கு ஒரு வழி
இருப்பது போல சோகத்தை மறைக்கவும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வழின்னு
அம்மாவிடம் சொல்லவா முடியும்?

ஸ்டேஷனில் எங்கள் பெட்டி எங்கேயோ தூரத்தில் இருக்க, தேடிக் கண்டுபிடித்து
நான் ஏறவும் ட்ரெயின் கிளம்பவும் சரியாக இருந்தது. கடைசியாக எதுவும்
பேசிக் கொள்ள நேரம் இருக்கவில்லை. புறப்பட்டு விட்ட ட்ரெயினிலிருந்து
எட்டிப் பார்க்கும் போது தெரிந்த கண் கலங்கிய கணவர் முகத்தை மறந்துவிடக்
கூடாது என்று இப்போதும் அடிக்கடி நினைவுபடுத்தி வைத்துக் கொண்டிருக்கிறேன்.
அதற்குப் பிறகு அப்படியொரு கணம் இன்று வரை பார்க்கக் கிடைக்கவில்லை.
ஜனகராஜ் பாணி வழியனுப்பு வைபோகம் தான் நடக்கிறது.


நிர்மலா.

பி.கு: இதோ இன்னொரு நினைவலைகள்! 18 வருஷமாக தொடரும் ஒரு
பயணத்தின் சில நியாபகங்கள். வசித்த இடங்கள், சந்தித்த மனிதர்கள்,
அவர்கள் தந்த பாதிப்புகள். தொடர் எழுத நினைவு படுத்தியதில் என்
பதினெட்டு வருடங்களையும் மறுபடியும் ஒருதரம் வாழ்ந்து பார்த்த மாதிரி
இருந்தது. கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது நிறைவாகத்தான் இருக்கிறது.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நிறம் நிறைத்திருக்கிறார்கள், இனிமேலும்.

யே ராஸ்தா ஹை கெஹரஹா அப் முஜ்ஸே
மில்னேகோ ஹை கோய் கஹி அப் துஜ்ஸே

(இந்தப் பயணம் என்னிடம் சொல்கிறது - இன்னும்
நீ சந்திக்க வேண்டியவர்(கள்) எங்கோ இருப்பதாக)

Saturday, May 30, 2015

????? ???? ???????? ???.????? ????????? ?????? ?????? ?????? ?????????????? ????? ?????????? ?????? ???? ??????????? ???????????????. ?????? ????? ?????? ??? ???? ???????????? ???????, ?? ????? ??????? ???????????? ????????. ???? ??????? ???????????????. ???? ???? ????????? ???? ???????? ????? ????? ??? ??????? ?????????? ?????????????????????. ??????? ???????? ???? ????? ???? ????????? ??????????? ???? ????? ?????????? ??????????????????.
????? ??????? ???????????? ???? ??????????? ???????? ???? ?????????? ????????. ?????? ?????????????? ?????????? ????? ???????????????? ?????????? ??????????????????. ????? ????? ??????????????? ????????? ?????? ?????????????. ???? ??????????? ????????? ???? ???? ????????? ?????? ?????? ??????? ??????? ????????? ??? ??? ????? ??? ???????? ???????, ????????? ???????? ???????? ???????? ???? ???????? ?????? ??????? ????????? ????? ????????? ???????? ???????. ?????? ???? ????????? ???? ????? ???????? ?????????! ?????????, ????? ???? ?????????? ????????? ?????? ????????? ??? ?????????????????.
?????????? ??? ???????? ?????????? ???? ??????? ???? ???????? ????? ????? ???? '?????? ?????? ????????' ????? ???? ????????? ??? ?????? ??? ?????. '??? ????????? ????????? ??????????? ???????? ???????? ??? ?????? ?????? ?????????' ????? ????? ???? '?????????? ???? ???????????' ????? ??????????????.
???????????? ?????? ????????? ??????? ????? ?????????, ?????? ???? ?????? ?????? ???????, ??? ???? ??????? ????? ????????? ??????????????? ???????? ????????? ????????????? ???????. ????? '?????? ??'???? ??????????????? ??? ??????. ????????? ???? ??????, ?????????????? ???????? ???? ????? ??????????? ?????????? ??????????? ???? ???????? ?????????????. ????????? ?????? ????? ?????????? ???? ????????????????.
????? ????????????? ??? ?????? ??? ???????? ??????? ?????????? ?????? ??? ?????. ??????? ?????????????? ????????? ????????? ??? ????????????????? ?????????????????? ?????. ??????? ??? ????????????????. ?????? ???? ?????, ????????????? ??? ????????? ????????? ???????????. ????? ?? ????????????? ?????????????? ????????? ?????? ???????? ????????? ????? ????? ???????????????? ????????. ???? ???, ?????, ???????, ??????????? ???? ?????? ????????????????. ?????????? ???????????????? ????????. '??, ?????? ????????? ????? ??????????'?? ?????? ?????? ???? ???????? ?????????? ????????? ?????????? ????????? ??????????? ?????????, ????????? ????????????? ????????? ?????????? ?????? ??????????? ????? ????????? ??????? ??????? ???? ??????????????? ??? ???????? ?????.
????????????? ???? ???????? ??????? ????? ????????? ??????? ??????? ??????? ?????????? ?????? ??????? ??????, ??????, ????????, ???????? ?¥ ??????? ??? ?????? ??????????, ?????????? ??????? ??????... ??????? ??????? ????????? ????? ??????? ???? ??????? ?????? ?????? ???? ??? ????????????. ???????? ??? ????? ??????? ???????? ????????? ???????? ???????? ????? ????? ?????????,
'??????? ??????? ??????????? ???????? ?????? ????????????? ????? ???????? ????????, ????? ???? ?????? ?????? ??????? ?????????? ?????? ????? ???????? ??????? ????????, ?????????? ??????? ????? ????????, ???????????... ?????????? ????????????? ????? ?????? ?????????'
?????? ?????, ??????????? ??? ?????? ??? ???????? ????????? ??????????, '? ????????? ?????? ????????????....'
???????? ???? ???????? ??????? ???????? ?????????? ?????????? ???? ???? ??????????? ???????? ????, ?????????... ????????... ?????? ????? ?????? ?????????????? ??????? ????????. ????? ?????? ???????? ????? ??????? ??????? ??????????? ??????? ????????????? ??????? ??? ???????????? ?????? ?????? ??????? ????? ???? job satisfaction test ??????? ????????, ????????? ???????? ???????? ??????????? ????? ?????? ?????? ???????? ??????? ???????? ????????? ???? ????????. ??? ?????? ???????? ????? ????????! ??????????? ?????????? ???? ??????. ???????? ?????????? ????????????? ??????? ?????????????? ??????? ?????? ??????? ???????? ??????? ?????!
?????????? ???? ??????????? ????????? ??????? ???????????????. ?????????? ?????? ???? ?????? ??? ???????? ???????? ????????? ???? ???????? ??????? ?????? ?????? ?????????? ????????????????????????! ??????? ???????? ????? ???? ???????? ?????? ?????????? ?????? ?????? ????????? ???? ???? ??????? ????????? ???????? ???????? ??????? ???????????.

Saturday, May 16, 2015

ஜப்பான் பயணம் - கடைசி.

நாரிட்டாவில் இறங்கும் போதே வெளிர் நிறத்தில் செர்ரி பூத்திருந்தது. வெயில் ஆரம்பித்துவிட்டதாலேயே நிறமிழக்க தொடங்கியிருந்தது. மவுண்ட் ப்யூஜி பக்கம் இன்னமும் குளிரடிப்பதால் நல்ல பிங்க் நிறத்தில் பூத்திருந்தது.

எங்கேயும் சிரித்தோ சத்தமாகவோ பேசும் பெரியவர்களைக் காண முடியவில்லை. இறுகிய/அமைதியான முகத்தோடே வளைய வருகிறார்கள். மெட்ரோ ரயில் பயணங்களில் மொபைல் போனில் முகம் புதைத்துக் கிடக்கிறார்கள்.

எங்கும் எதிலும் சுத்தம். குப்பையையே காணவில்லை. ஒரே ஒரு இடம் தவிர முழு பயணத்திலும் அதே சுத்தமான, சூடான கழிப்பறைகள். பொது கழிப்பறைகள் உட்பட.

பரிமாறும் வசதிக்காக எங்கள் குழுவின் நான் சேர்த்த மூன்று பேர் மட்டுமேயான அசைவ ஆசாமிகளுக்கு தனி டேபிள். அதனாலேயே அந்த தென்னிந்திய குழுவோடு கொஞ்சம் பழக முடிந்தது. அப்படி ஒரு மத்தியானத்தில்தான் கண்ணில் தண்ணீர் வர சிரிக்க வைத்த செல்வியின் அறிமுகம் கிடைத்தது. அவரோடு ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள நினைத்தது முடியாமல் போய்விட்டது. சென்னையில் எங்கேயாவது எதிர்படுவாரா என்று பார்க்க வேண்டும்.

மொத்த ஜப்பானின் இந்திய உணவக சமையல்காரர்களும் ஒரே ஆளிடம் சமையல் கத்துக் கொண்டது போல எல்லா இடங்களிலும் ஒரே சுவையில் மதியமும் இரவும் ஒரு சுட்ட கோழித் துண்டு பரிமாறப்பட்டது.

ஒரு நாள் கூட பயணத்திட்டமல்லாமல் காலாற நடக்கவில்லை. லோக்கல் சாப்பாடோ சூஷியோ சுவைக்கவில்லை. குடும்பத்தோடு போயிருந்த  flexi tour களில் மாலை நேரங்கள் எங்களுடைய சௌகரியத்திற்கு விட்டிருப்பார்கள். மலாகா, ஸ்பெய்னில் தங்கியிருந்த இடத்தில் இருந்து படகுத்துறை வரை நடந்து போன போது எதேச்சையாக ஒரு இந்திய‌ உணவகத்தை கண்டதும், திறந்த வெளி உணவகத்தில் அந்த மாலை நேரமும் வைனும் பஞ்சாபி சமையல்காரர் பரிமாறிய பிரியாணியும் மறக்கவே முடியாது. இந்தப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் மதியமும் இரவும் மாறாத‌ சுவையில் ஒரே மெனுவில் இந்திய உணவகச் சாப்பாடு அலுப்பூட்டினாலும் ஜப்பானிய உணவு பார்க்கும் போதே கொஞ்சம் திகிலூட்டத்தான் செய்தது.

ஒரு சுமோ மல்யுத்த‌ வீரரையும் காணவில்லை. அவர்கள் அதிகம் வெளியே வருவதில்லை என்று சியோமி சொன்னார்.

பெரிய ஊர்களைத் தவிர்த்த மற்ற இடங்களில் தெருவில் மனிதர்களையே காண முடியவில்லை. வெறிச்சோடிக் கிடக்கிறது.

ஒரு அதி தீவிர ஆணாதிக்க சமூகமாக ஜப்பானிய சமூகம் இருந்திருக்கிறது. அரச குடும்பம் தொடங்கி எல்லா உரிமைகளும் ஆண் குழந்தைகளுக்கு மட்டும் தான். சம அந்தஸ்துள்ள, உதாரணத்திற்கு ஒரு சமுராய் குடும்ப‌த்துப் பெண் இன்னொரு சமுராய் குடும்பத்தில் மணம் செய்தால் மட்டுமே மேற்கொண்டு சமுராய் பெயரைக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் சாதாரணாகிவிடுவார். அரச குடும்பத்துப் பெண்களும் இதற்கு விதிவிலக்கில்லை. ஆனால் இப்போதும் அப்படியா என்று தெரியவில்லை.

சமுராய் என்பது வெறும் குலப்பெயராக மட்டுமே உள்ளது. வாளெடுத்து நடந்த சமுராய்கள் இல்லவே இல்லையாம். சாம்பிளுக்கு கூட ஒருத்தரும் இல்லை. நம்ம ரஜினியும் விக்ரமும் தான் மிச்சம் போல.

வீட்டு வாசலில் செடிகளில் களை பறிக்க இரண்டாக மடிந்திருந்த அந்த வயதான அம்மணிக்கு எண்பது வயதுக்கு குறையாமலிருக்கும். ஆரோக்கியமான வயதானவர்களைப் பார்க்க நிறைவாக இருந்தது. குண்டான மனிதர்களையே அதிகம் பார்க்க முடியவில்லை. அதே அரிசிச் சாப்பாடுதான், அளவிலேதான் நாம் பெரும் தப்பு செய்கிறோம் போல. என் வயதே இருக்கும் சியோமி என் எடையில் பாதிக்கும் குறைவாயிருக்கிறார்.

ஆங்கிலம் செல்லுபடியே ஆவதில்லை. கடைகளில் சாமான்கள் வாங்கும் போது மொத்த பில் கணக்கை கால்குலேட்டரில் தட்டிக் காண்பிக்கிறார்கள். கொடுத்த பணத்திற்கு சரியான மிச்சம் தருகிறார்கள். எங்கேயும் ஏமாற்றோ திருட்டோ வழிப்பறியோ சீண்டலோ எதுவுமில்லை. எல்லா இடங்களில் அதி பத்திரமாக உண‌ர்ந்தோம்.

ஏறக்குறைய இந்திய ஐம்ப‌து பைசா ஒரு யென். ஒரு ஆயிரத்தை எடுத்தால் நிமிஷத்தில் செலவாகிவிடுகிறது. ஆனால் 100 யென் கடைகளில் சலிக்கும் வரை வாங்கித் தீர்த்தோம். இந்தியாவிலிருந்து போகும் போது இந்த 100 யென் கடைகளைப் பற்றி தோழி சொன்ன போது ஐம்பது ரூபாய்க்கு என்ன கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஏகப்பட்டது கிடைக்கிறது.

இரவு எட்டு மணியோடு டூர் பஸ் வேலையை முடித்துக் கொள்கிறது. அதற்குப் பிறகு எங்கேயாவது போக வேண்டுமென்றால் நாமேதான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. நேர விஷயத்தில் ரொம்ப கறார். கடைசி நாள் காலாச்சார நிகழ்ச்சிக்கு பிறகு நேரமாகி விட்டதால் மெட்ரோ ரயிலில் திரும்பி வந்தோம். ஓசாகா ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கி ஹோட்டல் பேஸ்மெண்ட்டில் இருந்த வாசலை அடைய நாற்பது நிமிஷம் நடந்தோம். அத்தனை பெரிய ரயில் நிலையம். ஏர்போர்ட் போல இருந்தது. தினமும் இப்படி பயணம் செய்கிறவர்களுக்கு தனியே வாக்கிங் எதுவும் தேவையில்லை.

புடவை கட்டியிருந்த நாளில் கொஞ்சம் பெருமிதமாக இருந்தது. இனிமேலான இது போன்ற பயணங்களில் முடிந்த வரை புடவை உடுத்த வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

வெறும் பெண்களாக போயிருந்ததாலோ என்னவோ எல்லா நேரமும் சிரித்துக் கொண்டேயிருந்தோம். மூன்றாவது நாள் எனக்கு திருமணமாகிவிட்டது என்பதையே மறந்து விட்டிருந்தேன். பொறுப்புகளற்ற அது ஒரு மாதிரியான மனநிலை. கூட இருந்த பதினைந்து பேரும் தான் என்னுடைய நாற்பத்தேழு வருட கடந்த காலத்தின் ஒரே கனெக்ஷன் போல இருந்தது. அது விடுதலையல்ல, ஆனாலும் ஏதோ ஒன்று. திரும்பி வந்த நாள் காலையில் டீக்கு எவ்வளவு தண்ணீர் வைப்பேன் என்று ஒரு நிமிஷம் ஞாபகம் வரவில்லை.

ஆனாலும் எட்டாவது நாள் என் வட்டத்திற்குள் வந்து விட்டிருந்தேன்.

Friday, May 15, 2015

ஜப்பான் பயணம் - 3

ட்ராவல் ஏஜெண்ட் கொடுத்திருந்த ப்ரோக்ராம் படி அன்றைய இரவு hot spring bath இருந்தது. சில பல நடைமுறைக்கு சாத்தியமில்லாத‌ காரணங்களால் அதற்கு போக முடியவில்லை. சியோமி சொல்லும் வரை தயாராக இருந்த நாங்கள் விவரம் தெரிந்து பின்வாங்கி விட்டோம். மறுநாள் காலையில் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ள  வேண்டுமே! அந்தக் குறையை ஈடு செய்ய அறையில் வைத்திருந்த  yukata bathrobe ஐ கிமோனோவாக பாவித்து போட்டோ செஷனை முடித்துக் கொண்டோம். நல்ல விலையுயர்ந்த பட்டில் இடுப்பில் கட்டும் பட்டியெல்லாம் வைத்து கூடவே தலையலங்காரங்களெல்லாமாக ஒரு கிமோனோவுக்கு $20000 ஆகுமாம். இது வெறும் பருத்தியாலான சின்ட்ரெல்லா சிஸ்டர்.

மறுநாள் காலை ஹிரோஷிமாவுக்கு புல்லட் ட்ரெயினில் பயணம். ரயில் நிலையம் போகும் வழியில் சியோமி சொன்னதில் புரிந்தது... ஜப்பானியர்கள் R&D க்கு அதிக நேரமெடுத்து சிறப்பான பொருட்களை அளிக்கிறார்கள். ஆகவே மார்க்கெட்டில் ஏற்கனவே இருக்கும் ஒரு சாமானுக்கு மாற்றாக வரும் இன்னொன்று தரத்தில் அதைவிட மேலானதாக இருக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது. மேலும் ஜப்பானிய பொருட்கள் விலை கூடுதலாக இருந்தாலும் தரத்தில் சிறந்ததாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை. சீனர்கள் இங்கே வந்து பொருட்களை வாங்கிச் செல்வது அதற்காகத்தான். ஐம்பது வருஷ புல்லட் ட்ரெய்ன் வரலாற்றில் ஒரு விபத்து கூட கிடையாது. அவர்களைப் பார்த்து சைனாக்காரர்கள் தயாரித்த புல்லட் ட்ரெயின் முதல் வருஷமே விப‌த்துக்குள்ளானதாம்.

புல்லட் ட்ரெயினில் ஜப்பானியர்கள் தங்களுக்குள்ளே மூழ்கி அமைதியாக இருப்பார்கள் அதனால் வழக்கமான இந்தியத்தனமான கூக்குரல்கள் வேண்டாமென்று இந்திய கைட் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். எவ்வளவு தூரம் கடைபிடிக்க முடிந்தது என்பது பெரிய கேள்விக்குறி.




ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் இரண்டு புல்லட் ட்ரெய்ன்கள் கடந்து போனது. உயரம் குறைவாக நீள் மூக்கோடு வெளுவெளு வெண்ணையாக முதலில் வந்தது, வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் விஷ்க் என்று கடந்து போயிருந்தது. அதனாலேயே அடுத்தது வந்தால் வீடியோவாக எடுக்க தயாராக இருந்த போதும் காமிராவில் வீடியோ பட்டனை அழுத்தக் கூட அவகாசம் கொடுக்கவில்லை. ஏறி அமர்ந்த பிறகு மணிக்கு 200 மைல் வேகத்தில் சென்ற‌ புல்லட் ட்ரெய்ன் ஏனோ நினைத்த அளவு ஆச்சர்யம் தரவில்லை. வேறு நாடுகளில் இதைவிட வேகமான ரயில் பயணங்களை ஏறக்குறைய எல்லாரும் போயிருந்தோம்.

காலை பத்து மணிக்கு தொடங்கிய பயணம் இரண்டு ரயில்களில் மதியம் இரண்டு மணியளவில் ஹிரோஷிமாவில் முடிந்தது. மதிய உணவு உண்ட இந்திய உணவகத்தில் கிளம்பும் போது இரண்டு ஓரிகேமி பேப்பர் கொக்குகளை கொடுத்து அடுத்து வரப் போகும் கனமான நாளுக்கு தயார் செய்திருந்தார்கள்.  நடு வட்டக் கூரையும் மிச்சமிருக்கும் சிதலமான ஹிரோஷிமா நினைவுச் சின்னமும் ம்யூஸியமும் யாரையும் கலங்கச் செய்வது. ஏராளமான நினைவுச் சின்னங்களும் அதனோடு தொடர்புடைய செய்திகளும். எரிந்து போன சைக்கிளையும் உருகி வழிந்த பாதி ஹெல்மெட்டையும் மகனோடு சேர்த்து வீட்டுக் கொல்லையில் புதைத்திருந்த தகப்பன் பின்னெப்போதோ அதைத் தோண்டி எடுத்து ம்யூஸியத்திற்கு அனுப்பி வைத்திருந்தார். உருகி கருகிப் போன ஒவ்வொன்றும் சொல்லும் கதைகளுக்கு முடிவேயில்லை. யாரோ யாரோட போட்டுக் கொள்ளும் சண்டைக்கு நம்மைப் போல நூறாயிரம் பேர்கள் பலியான கதைகளில் நாமும் சாவைக் கண்டு மீள்கிறோம். செய்யக் கூடியது பெரிதாக எதுவுமில்லை.




அடுத்த நாள் காலை ஓசாகாவிற்கு பஸ்ஸில் கிளம்பினோம். ஒசாகா டோக்கியோவிற்கு அடுத்த ஜப்பானின் பெரிய நகரம். போகும் வழியில் குராஷிகி என்ற இடத்தில் ஒரு கால்வாய் கரையில் ஒரு ஸ்டாப் இருப்பதாக பயணக்குறிப்பில் இருந்தது. அதிகம் வெயில் உரைக்காத காலை நேரத்தில் அங்கே போய் சேர்ந்தோம். ஐந்து நிமிட நடையில் நீண்ட கால்வாய் கரைக்கு போய் சேர்ந்தோம் . அதன் இரண்டு புறங்களிலும் புராதனமான ஜப்பானிய பாணி கட்டிடங்கள். நிறைய சாவனியர் கடைகள், உணவகங்கள், கலைப் பொருள் சேகரிக்கும் இடங்கள், ம்யூஸியம்கள், கிமோனோ உடுத்திய பெண்கள், கால்வாயின் படகு சவாரி, கோச் வண்டிகள்... ஒரு ஓவியத்திற்க்குள் நுழைந்தது போலிருந்தது.  இந்த பயண‌த்தின் மறக்க முடியாதது எதுவென்று கேட்டால் சற்றும் யோசிக்காமல் இதைச் சொல்வேன். எங்கேயிருந்து ஒரு போட்டோ எடுத்தாலும் அது ஒரு போஸ்ட்கார்ட் அழகோடு இருந்தது. எத்தனை வளர்ச்சிகள் அடைந்தாலும் டெக்னாலஜி முன்னேறிச் சென்றாலும் ஆழ்மனதை தொடுவது இயற்கையும் பழமையும் அல்லாமல் வேறெதுவும் இல்லை. ஒரு நாள் பூராவும் விட்டிருந்தாலும் அங்கேயே இருந்திருப்பேன்.

 







மதிய உணவிற்குப் பின் Osaka castle. வெளியே இருந்தே பார்த்துவிட்டு மீதி நேரத்தை ஷாப்பிங்கில் கழித்தோம். மறுநாள் மூன்று கோவில் பார்ப்பதாக இருந்தது. அதில் ஒரு கோவிலை தவிர்த்து ஜப்பானிய கலாச்சார நிகழ்ச்சிக்கு போவதாக மாற்றிக் கொண்டோம்.

அடுத்த நாள் நாங்கள் அத்தனை பேரும் புடவையில் கிளம்பியிருந்தோம். காலையில் முதலில் பார்த்தது நாராவில் உள்ள Todai-ji temple. அகண்டு கிடந்த பழங்கால கோவில். அதோடு இணைந்து நாரா மான் பூங்கா. அதனாலே பள்ளிக் கூட குழந்தைகள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள். பணிவும் மரியாதையும் மாறாத கன்னம் சிவந்த ஜப்பானிய குழந்தைகளை ஆசை தீர பார்த்தோம்.






முதல்முதலாக இந்த பயணத்தில் பிரம்மாண்டமான கரிய புத்தரைப் பார்த்தோம். கோவிலை முடித்து வெளியே வந்ததும் மான் கூட்டம். மான்களுக்கு கொடுக்க வட்டமான பிஸ்கட்கள் விற்கிறது. வாங்கி நீட்டுவதற்கு முன்னால் போராடிப் பறித்துக் கொள்கிறது. அதைத் தவிர மற்ற நேரங்களில் சாதுவாக மனிதர்களோடு கலந்து சுற்றிக் கொண்டிருக்கிறது. வ‌ழுவழுவென்று சதையாலான கொம்புகளை முன்னெப்போதும் பார்த்ததில்லை. மான்களையே இவ்வளவு பக்கத்தில் பார்த்ததில்லை.

அதற்கடுத்தது  kinkaku-ji Golden temple. காலமே ஸ்தம்பித்தது போல அலைகளே இல்லாத குளத்தில் தங்கநிறத்தில் நிற்கிறது. சுற்றி வரும் பூங்கா பாதையின் எங்கிருந்து பார்த்தாலும் அதே அழகோடு.




மதிய உணவிற்குப் பின் ஜப்பானிய கலாச்சார நிகழ்ச்சிக்காக போய் சேர்ந்த போதும் அதற்கு முன்னாலும் சியோமி கெய்ஷாக்களைப் பற்றி கொஞ்சம் பேசியிருந்தார். Memoirs of Geisha வாசித்திருந்ததால் ஓரளவிற்கு அவர்களைப் பற்றி தெரிந்திருந்தது. பயிற்சியில் இருப்பவர்களுக்கு மைக்கோ என்று பெயர். குறைந்த பட்சம் இரண்டு வருடங்களாவது பயிற்சி எடுத்தால் தான் கெய்ஷாவாக முடியுமாம். நாங்கள் போயிருந்தது ஒரு  tea ceremony, flower arrangement, a musical, maiko dance, a comedy show n a puppet show என்று மொத்தமாக ஐம்பது நிமிட நிகழ்ச்சி.






முதல் மூன்று நிகழ்ச்சிகளையும் ஒரே நேரத்தில் அவசரமாக முடித்துக் கொண்டாலும் மைக்கோ நடனம் கற்பனையில் இருந்த கெய்ஷாவை கண் முன்னால் நிறுத்தியது. அவர்களுடைய மேக்கப், உடையலங்காரம், பின் கழுத்தில் வெண் பூச்சுக்கு நடுவில் மூன்று வரிகளில் தெரியும் உடல் நிறம், மென்மையான உடலசைவுகள்... அந்தத் தெருவே கெய்ஷாக்கள் வசிக்கும் தெருவாயிருந்திருக்கலாம். நாங்கள் போயிருந்த போது பளபளக்கும் கருப்பு லெக்ஸச் கார்களில் வந்திறங்கிய கனவான்கள் ஜப்பானின் இன்னொரு முகமாயிருந்திருக்கலாம். இந்தியாவின் இது போன்ற தெருக்களில் நான் இவ்வளவு ஸ்வாதீனமாக போயிருந்திருக்க முடியுமா தெரியவில்லை. ஆனால் அந்த இடம் அதுவாகத்தான் இருந்தது போலிருந்தது.

ஜப்பானின் கடைசி இரவு அது.