Saturday, September 12, 2020

நிர்மலா

 

    உரக்கப் பேசுவதில்லை
    மெல்லிய குரலில்
    ஓரிரு வார்த்தைகள் மட்டும்
    அவை நேரடியாகப் போய்ச் சேர்வதில்லை
    பெரும்பள்ளத்தில் இறங்கி ஏறி
    அர்த்தம் இழந்து
    வீரியமிழந்து
    அங்கிருந்து பார்க்கும் போது
    நரியாக பரியாக தெரிந்தாலும்
    இங்கே நிர்மலாவாகவே நிற்கிறேன்
    விலகி நகர்கிறேன்
    மேலும் தனிமை கொள்கிறேன்
    ஆள்க்கூட்டத்தில் தனியாகவா
    முழுத்தனிமையா
    இக்கேள்வியை எதிர்கொள்ளும் தோறும்
    தனிமைக்கு வாக்களிக்கிறேன்
    தக்க வைத்துக் கொள்ளும் வேட்கையில்
    ஆனாலும் திரும்பி வருகிறேன்
    ஒவ்வொரு முறையும்
    நிறம் மாறி
    அறிவார் யாருமின்றி.


No comments: