Wednesday, April 04, 2007

Women & Men in my Life - Khushwant Singh

ஆங்கில புத்தகங்கள் வாசிப்பது ஏறக்குறைய இல்லை என்றாகிவிட்ட ஒரு சமயம் 'to kill a mocking bird' கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்து தாண்ட முடியாத பத்தம்பது பக்கங்களுக்குப் பிறகு 'வேண்டாம் போ' என்று விலக்கி வைத்தது 'அவ்வளவுதானா?' என்று கேட்டது. ரொம்ப லேட்டா தொடங்கி சீக்கிரம் முடிந்து விட்டதோ நமது ஆங்கில வாசிப்பு என்று தோன்றியது. சென்னை வந்ததில் இதுவும் ஒரு பெரிய மாற்றம். வெளியே இருந்த போது வாசிக்க தமிழ் புத்தகம் எதுவும் கிடைக்காத கட்டாயத்தால் எதேச்சையாக தொடங்கியது ஆங்கில நாவல் வாசிப்பு. இப்போதான் தமிழே வேண்டியமட்டும் கிடைக்கிறதே என்று அதிகம் வாசிக்காமல் இருந்தாலும், பழக்கம் விட்டதில் கொஞ்சம் வருத்தம்.

75% வரை தள்ளுபடி என்று ஆசை காட்டிய சென்னை oxford... பேருக்குத்தான் 75%... அந்த பகுதி எங்கே என்றே பார்க்கவில்லை! வழக்கமாக இழுக்கும் தலைப்புகள் பகுதியில். இதற்கு முன்னாலேயே பார்த்தும் வேண்டாம் என்று விட்ட Women & Men in my life - Khushwant singh... இந்த முறை மறுக்க முடியவில்லை. அவருடைய ஆட்டோபயாகிரபி, death at my doorstep எல்லாம் படித்து முடித்ததில்... என்னவோ எனக்கு அவரைப் பற்றி எல்லாம் தெரியும் என்ற தோணல். அதனாலேயே இதை வாசிக்கத் தொடங்கியதும்... மற்றபடி அதிகம் கேட்டிராத பொது வாழ்கை மனிதர்களை, அவருடைய புத்தகங்கள் மூலம் மட்டுமே அறிந்திருந்த அதே மனிதர்களைப் பற்றிய செய்திகளை கொஞ்சம் மாற்றங்களோடு இன்னொரு முறை கேட்பது... வீட்டில் இருக்கும் வயதானவர்கள் சொன்ன விஷயங்களையே திரும்பத் திரும்பச் சொல்வது போல! மனுஷனுடைய எழுத்து சுவாரசியதினாலே எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.

இந்த புத்தகத்தை எழுதியதில் கோவித்துக் கொண்டு கொஞ்சம் பேர் 'உன் பேச்சு கா' விட்டுப் போய் விட்டதாகவும், வெளிப்படையாக சொன்ன நேசத்தில் கொஞ்சம் பேர் ரொம்ப சந்தோஷப் பட்டதாயும், என்ன எழுதியிருக்கு என்று படித்துப் பார்க்காமலேயே சிலர் மறுதலித்துப் போனதாயும் முன்னுரையில் சொல்கிறார். புத்தகத்தில் பெண்களைப் பற்றி எழுதியிருப்பதில் சொட்டுவது தனி ரசம்... குஷ்வந்த் சிங் ரக ரசம்! அனுபவித்து எழுதிருப்பதால் வாசிக்கும் போது அந்த பிரியம் அப்படியே உள்ளே இறங்கிவிடுகிறது.

வயது வித்தியாசமில்லாமல், இன்ன உறவு என்று சொல்ல முடியாத நேசத்தில், ஏதோ ஒரு விதத்தில் பாதித்த, வெவ்வேறு காலகட்டத்தில் சந்தித்த பெண்கள்... பெண்கள்... பெண்கள். கொஞ்சம் ஆண்களும்! நல்லதையும் கெட்டதையும் தாட்சண்யமில்லாமல் சொல்லிப் போகிறார். வெறும் மனசைத்
தான் பார்த்தேன் என்ற மழுப்பல்கள் இல்லாத 'பிந்தாஸ்' குறிப்புகள். தைரியம், சாமர்த்தியம், வெகுளித்தனம், திருட்டுத்தனம், mysterious... எல்லாமாய் பிடித்தவர்கள்.

சில வரிகள்....

'You Know how much weight i have shed? look.' She turned, pointing to her bare midriff. 'All gone. And dont u tell me slimming down does not suite me.'....... I have been to Bombay many times since but have not had the courage to call on her. I want to preserve the image of the Devyani Chaubal I had known: fat, full of life, malicious gossip, mimicry and a zest for life.

The lady persisted, 'Never mind the age difference, you still look like a married couple.' I slipped out of the dining hall and went to bed without dinner. After the compliment I didnt need any. I was little worried about how the rest of Nirmala's family would take that faux pas.

If this was true (men's gossip is less reliable than woman's) love formed very little part of Amrita's life. Sex was what mattered to her. She was a genuine case of nymphomania, ....

She put on her tape recorder at full blast, sang with it and talked at the top of her voice. I almost went round the bend and pitied her husband who had to put up with such exuberance every day.

ஆண்களைப் பற்றிய மீதிப் பாதி புத்தகம் கொஞ்சம் நியூஸ் ரீடிங் போல! மற்றபடி, ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம். முடித்த கையோடு ரொம்ப நாள் பெண்டிங் 'one hundred years of solitude' படிக்க வைத்ததில் குஷ்வந்த் சிங் பங்கு அதிகம். கொல்கத்தா வந்து, போன சனிக்கிழமை அவருடைய வழக்கமான column வாசித்ததும் இடையில் கொஞ்சம் தொய்ந்து போயிருந்த குஷ்வந்த் சிங்குடனான உறவு மறுபடியும் அதே போலாகி விட்டது.

தலைப்புதான் ரொம்ப தூண்டுகிறது... என்னையும் 'எழுதேன்' என்று! எப்போதாவது செய்யனும்.

12 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நிர்மலா,

ரொம்ப இரசிச்சு எழுதியிருக்கீங்க. இந்தப் புத்தகம் இங்கல்லாம் கிடைக்காது. இதுக்காக மினக்கெட்டு வாங்கவும் தோணல. ஆனாலும், உங்களுடைய இடுகையைப்படிச்சதும் வாசிக்கணும்போல ஒரு உந்துதல். எல்லாம் இந்த காசிப் காலம் படிக்கிற பழக்கமாயிருக்கும். ;)

//தலைப்புதான் ரொம்ப தூண்டுகிறது... என்னையும் 'எழுதேன்' என்று! எப்போதாவது செய்யனும். //

எழுதலாமே. என்ன, ஒரு நாவல்/சிறுகதைகள் வடிவில் முயற்சிக்கலாம் நீங்க. முந்தி நீங்க மரத்தடியில் எழுதிய சித்தப்பா இன்னமும் நினைவிலிருக்கிறார்.

-மதி

Nirmala. said...

ஐயோ மதி, குஷ்வந்த் சிங் வாசிக்கறதுன்னா எப்பவும் ஒரு தனி குஷி! மனுஷன் வழியறது ரசிக்கற மாதிரி ரகம்.

நான் எழுதறதுக்கு இன்னும் கொஞ்சம் போகட்டும். நாவல்ல என்னை மறைச்சு எழுதறதுக்கு இன்னும் கொஞ்சம் ட்ரெயினிங் வேணும்! :-)

Raj Chandra said...

So far, I love his "Delhi". Naturally I am attracted to Mogul history and it was happy to note that he was also on the same boat. Not many people recognized the grand plan of that book, but if you love the city Delhi, you will love the book too.

Nirmala. said...

ஆமாம் ராஜ்... அதுதான் விஷயம். எங்கேயாவது எதையாவது தொடணும்.

'Delhi' படித்ததில்லை... அவருடைய இன்னும் சில புத்தகங்களும் வாசிக்க வேண்டிய லிஸ்டில் இருக்கிறது.

Jazeela said...

குஷ்வந்த் 'நிர்மலா' என்று குறிப்பிட்டிருப்பது உங்களை இல்லையே ;-) ?

Nirmala. said...

எப்படி ஜெஸி?! கற்பனை குதிரை சும்மா கன்னா பின்னா ஓட்டம் தான்! அதே ஃப்ளோல பதில் சொல்லனும்னா... i wish! hehe...

Mookku Sundar said...

//நான் எழுதறதுக்கு இன்னும் கொஞ்சம் போகட்டும். நாவல்ல என்னை மறைச்சு எழுதறதுக்கு இன்னும் கொஞ்சம் ட்ரெயினிங் வேணும்! :-)//

நான் மறைக்காமத் தான் எழுத முயற்சி பண்றேன் - ஓரளவுக்கு. :-) :-)

அதனால எனக்கு ட்ரெயினிங்கே வேண்டாம்.

இன்னமும் ஃபுல்ல்லா எழுதணும்ணா டைரிதான். அத மட்டும் யாராவது தெரியாம படிச்சுட்டா, பைத்தியம் பிடிச்சு தலை வெடிச்சு செத்துப் போயிடுவாங்களேங்கிற கனிவுலதான் டைரி எழுதாம இருக்கேன். :-) :-)

நாமக்கல் சிபி said...

//எழுதலாமே. என்ன, ஒரு நாவல்/சிறுகதைகள் வடிவில் முயற்சிக்கலாம் நீங்க//

கட்டாயம் முயற்சி செய்யணும்!

Nirmala. said...

நானும் தான்... என்ன உங்களை விட இன்னும் ரெண்டு படி கீழே 'ஓரளவுக்கு'! :-) அதுக்கு மேல வரதுக்குத்தான் இன்னும் கொஞ்சம் போகட்டும்னு சொன்னது!

அப்புறம், அதே கனிவில தான் நாமளும் டைரியெல்லாம் எழுதறதில்லை! மனசுக்குள்ளயே எழுதி ஓரமா தள்ளி வச்சுடறது.. அப்பப்ப கொஞ்சம் refeshing உண்டு... முக்கியமான விஷயங்கள் மறந்து போயிடக்கூடாதில்லையா! :-))))

Nirmala. said...

செய்யலாம் சிபி... கொஞ்சம் போகட்டும்.

N Suresh said...

வணக்கம்

உங்களின் வலைப்பூ வாசித்தேன்.
ரசித்தேன், நன்றி.

குஷ்வந்த் ஐயாவின் புத்தகத் தலைப்புகள் பொதுவாகவே அதன் விற்பனைக்கு மிகவும் உதவும்.

மகிழ்ச்சியுடன்
என் சுரேஷ்

Nirmala. said...

நன்றி சுரேஷ். அது வியாபார உத்தி என்பது புரிந்தாலும், அது அவசியம்! நான் வாசித்த அவருடைய முதல் புத்தகமும் இது போல தலைப்பில் இழுக்கப்பட்டு வாசித்தது தான்... அதற்கப்பறம் தொடர்ந்து வாசிக்க வைத்ததற்கு வெறும் தலைப்பு மட்டும் போதுமாயிருந்திருக்காது தான்! :-)