Monday, March 08, 2010

நொடியில் ஒரு பரிணாம மாற்றம்

அவளைப் பற்றிச்
சொல்ல வேண்டும்

இளமையிலும் இல்லறத்திலும்
தாய்மையிலும்
வேண்டிய மட்டும் பெண்மையை
கொண்டாடி விட்டதாய்
உணரத் தொடங்கியிருக்கிறாள்

சட்டென்று ஒரு மாற்றம் அவளில்
நடந்தே தீருமென்று நம்புகிறாள்

சின்னதாய் ஒரு கற்பனை
செய்து வைத்திருக்கிறாள்

நினைவு தெரிந்த நாளாய்
அவளுள்ளே
நிரப்பி வைத்த பெண்மை உணர்வுகள்

உறங்கியெழும் ஒரு காலை
உச்சந்தலை தொடங்கி
மொத்தமும் வடிந்து காலடியில்
குட்டையாய் தேங்க
எடுத்து வைக்கும் முதலடியில் 
ஒரு உயிராய் மட்டும்
தன்னை உணரப் போவதாக

உணரத் தொடங்குவது முதல்படியல்ல
அதுவே முழுப்பயணமும் என்பதில்
தெளிவாயிருக்கிறாள்

தீண்டும் விரல்களிலும்
எதிர்கொள்ளும் பார்வைகளிலும்
பேதமின்றி
மறுக்கப்பட்ட இடங்களும்
தவிர்க்க வேண்டிய நேரங்களுமில்லாமல்

நேசம் பொங்கும் நேரம்
விரித்த கைகளில் வழிந்தோடவிட்டும்
உள்ளே அமிழ்ந்து

தன்னைத் தேடும் தருணங்களில்
மொத்தமும் துறந்த தனிமையுமாய்...

உயிராய் உணர்வதும்
துறந்த தனிமையும்
முடியவே முடியாதென்று
புறந்தள்ளுகிறேன்

எத்தனை நாளென்னை
மறுக்கப் போகிறாயென்று
சத்தமில்லாமல் சிரிக்கிறாள்

எனக்குள்ளிருந்து.

2 comments:

நிலவாழ்வான் ஆதவன்... said...

Your poems are so nice..

very nice to read..

take care..

keep going..

Regards,
Arun Jeevan

நிலவாழ்வான் ஆதவன்... said...

Your poems are so nice..

very nice to read..

take care..

keep going..

Regards,
Arun Jeevan