Saturday, November 19, 2005

குஷ்வந்த் சிங் என்றொரு குழந்தை

வழக்கமாக பத்து பதினைந்து நிமிடங்களில் முடிந்து விடும் செய்தித்தாள் வாசிப்பு சனிக்கிழமைகளில் மட்டும் கொஞ்சம் எதிர்பார்ப்போடு இன்னும் சில நிமிடங்கள் நீடிக்க குஷ்வந்த் சிங் தான் காரணமாயிருப்பார். பெரும்பாலும் சவசவன்னு போகும் அவருடைய அந்த வாராந்திர பத்தியை ஏனோ விட மனசு வந்ததில்லை. எப்போதாவது ஒரு சின்ன சிரிப்பு... சில தகவல்கள், கொஞ்சம் அரசியல், பழைய நண்பர்கள்... எல்லாமுமாயிருக்கும்.

இன்றைக்கு மார்க்வெஸ்ஸின் My Melancholy Whores பற்றி கொஞ்சம் விலாவரியாக கதை சொல்லி கடைசியில் இப்படி முடிக்கிறார்...

I am unable to fathom reasons which induced Marquez to write this novella almost entirely confined to prostitutes. The urge to write about my own fantasies came to me when i was in my 80s. I churned out 'The Company of Women'. I wrote a short prefatory note admitting that when a man ages, his sexual desires travel from his middle to his head. And all that I have written were imaginary sex-escapades of an octogenarian. Needless to say it was panned by most critics, and predictably also went into several editions. Marquez's latest will make it to the top world's best-seller list and earn him another fortune. It does not shake me. My consolation is that I did a better job than he even if the world does not agree with me.

இந்த 'The Company of Women' புத்தகம் கைக்கு கிடைத்தது ரொம்ப எதேச்சையாக. எதையோ தேடி விசாரிக்க, அது சேரன் டவர்ஸ்ல தான் கிடைக்கும் என்று யாரோ வழிகாட்ட, அந்த சேரன் டவர்ஸையே தேட வேண்டியிருந்தது. கடைசியில் தேடிப் போன சாமான் கிடைக்கவில்லை, ஓடாத புத்தகக் கடையை முடிவிடும் முடிவிலிருந்த ஒரு புத்தகக் கடைக்காரர் கிடைத்தார். மனசில் தோன்றிய விலைக்கு புத்தகங்களை தள்ளி விடும் உத்தேசத்திலிருந்தார். அப்போது வாங்கிய மற்ற புத்தகங்கள் நினைவில்லை. ஆனால் இந்த புத்தகம் வெறும் எழுபத்தி ஐந்து ரூபாய்க்குக் கொடுத்தார். அது தான் முதல் குஷ்வந்த் சிங் எழுத்து அறிமுகம். அந்த புத்தகம் வாசித்த அந்த ஆறேழு நாட்களும் இருந்த உணர்வை எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை. ஆனால் சில விஷயங்களை சொல்லி விட்டுப் போயிருக்கிறது. அந்த வாசிப்பு மயக்கம் தான் இன்னும் குஷ்வந்த் சிங் எழுத்துகளை எங்கே பார்த்தாலும் விட முடியாமல் விரட்டுகிறது.

ஆனாலும் இன்றைக்கு ஏனோ அவரைப் பார்க்கும் போது தொண்ணூறு வயதுக் குழந்தை (ஆச்சுதானே குஷ்வந்த் சிங்ஜி?) போலிருக்கிறார். என் பொம்மை தான் உசத்தி என்று சொல்லும் குழந்தை!

No comments: