Tuesday, November 08, 2005

ANTARMAHAL - ஒரு பாஷை தெரியாத பார்வையில்.

நான் பார்த்த ரிதுபர்னோ கோஷின் இரண்டாவது படம். சோக்கர் பாலியின் சாயலோடு கொஞ்சம் எதிர்பார்ப்பை தூண்டியதாயிருந்தது.

பாஷை தெரியாமல் படம் பார்க்கும் desperation என்னவென்று இன்றைக்கு புரிந்தது. ஹாஸ்ய படமாயிருக்கும் பட்சத்தில் பேசுவது புரியாவிட்டாலும் செய்கைகள் சில நேரம் சிரிப்பை வர வைக்கும். இவ்வளவு உணர்ச்சி கொப்பளிக்க என்னதான் சொல்றாங்க என்று தவிப்போட பார்க்க வைத்த படம். தியேட்டர் வாசலில்
வைத்திருந்த விளம்பர அட்டையில் with english sub-titles என்று போட்டிருந்ததை பற்றி அதிகம் அக்கறையில்லாமல் தான் பார்க்கப் போயிருந்தேன். படிப்பதில் கவனம் போனால் படத்தை ரசிக்க முடியாது என்று தான். sub-titles என்னவோ வரவில்லை. ஆனால் ஏன் போடலைன்னு திரும்பி வர்றப்ப டிக்கெட் கொடுத்த மகராசனை கேள்வி கேட்டுட்டு தான் வந்தேன்.

வீட்டுக்கு வந்து போன வார பேப்பரில் அதோட விமர்சனம் வந்திருந்ததே அதையாவது பார்த்து படத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் என்ற முயற்சியும் வீணானது. விமர்சனம் எழுதிய புண்ணியவானும் கதையைச் சொல்லாமல் விட்டிருக்கிறார். என்னைப் போல!

ஆனால் வேறொரு தியேட்டரில் sub-titles உடன் வருவதாக சொல்லியிருக்கிறார். இன்னொரு தரம் பார்த்தே ஆக வேண்டும். அதுவரை அந்த கேரக்டர்கள் எல்லாம் என்னதான் பேசியிருக்கும் என்ற க்யூரியாசிட்டியோடு நான் இருக்கப் போகிறேன். பார்த்து விட்டு வந்து கொஞ்சம் போல சொல்கிறேன்.

No comments: