Thursday, March 14, 2019

நிகழ்கிறோம்

எங்கிருந்தும் வருகிறாய்
புரட்டும் என் பக்கங்களிலிருந்து
சிறகடித்துக் கிளம்புகிறாய்
உன் கற்பனைக்கப்பால்
நிகழுமென் நாட்களில்
காரிய நேர்த்திகளாய்
துலங்குகிறாய்
நல்லதோர் குழம்பின் ருசியில்
குமிட்டி அடுப்பும்
பின் கொசுவமுமாய்
என்னுள் நிகழ்த்திச் செல்கிறாய்
ஓவ்வொரு சிறகாய்
சூடிக்கொள்ளுமென்
தொப்பியின் இழைகளாயிருக்கிறாய்
தலைமுறைகள் தாண்டித் தொடர்கிறாய்
நைராவின் புத்தகங்களிலிருந்து
நீலப் பட்டாம் பூச்சியாய்
நானும் சிறகடிப்பேன். 
 


No comments: